பெங்களூருவில் ஜெயின் கல்லூரியில் பேச அழைத்திருந்தார்கள். முதுகலை முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்று வகுப்பு தொடங்குகிறது.
பத்தொன்பது வருடங்களுக்கு முன்பாக கல்லூரியில் சேர்ந்த போது முதல் நாள் வகுப்புக்குத் தலை நிறைய எண்ணெய் அப்பி, அழுந்த வாரி ரப்பர் செருப்பு அணிந்து சென்றிருந்தேன். அது வரைக்கும் வார் செருப்பு அணிந்தது இல்லை. படிய வாரி, திருநீறு பூசுவது என்பது நல்ல மாணவனுக்கான அடையாளம் என்ற பிம்பம் உருவாகியிருந்தது. என்னை மாதிரியே இன்னமும் நான்கைந்து பேர்கள் இருந்தார்கள். வகுப்புக்கு வந்த ஆசிரியை தனியாக அழைத்து அறிவுரை சொன்னார். அதன் பிறகும் அப்படியேதான் இருந்தேன். மெல்ல மெல்லத்தான் மாற முடிந்தது. முட்டையில் படைத்தது கட்டைக்கு போகும் வரைக்கும்.
இந்த பிளாஷ்பேக்தான் ஓடிக் கொண்டிருந்தது.
துறைத் தலைவர் முதலில் பேசினார். நிலையின்மை குறித்துச் சொன்னார். முதல் நாள் கல்லூரியில் அமர்ந்திருக்கும் போது எவ்வளவோ அலையடிக்கும். 'என்ன வேலைக்கு போவோம் என்பது மாதிரியான குழப்பங்கள் உங்கள் மனம் முழுக்கவும் ஆக்கிரமித்திருக்கும்.. இல்லையா?' என்று கேட்டார். அது கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமில்லை. அப்படியொரு எண்ணங்களின் அலைகள் இருக்கும் வரைக்கும்தான் வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்கிறோம். 'அடுத்து என்ன?' என்ற கேள்வி மட்டும் சுழன்று கொண்டேயிருக்க வேண்டும். சுழன்று கொண்டிருப்பவர்கள் புதிய புதிய உயரங்களைப் பார்க்கிறார்கள்.
படித்து முடித்து, வேலை கிடைத்து, கல்யாணம் ஆகி குழந்தை பெற்றவுடன் 'இருக்கிற இடம் தெரியாம அமைதியா இருந்துட்டு போயிடுவோம்' என்று நினைக்க ஆரம்பிக்கும் போது நம்மைச் சுற்றி ஒரு வட்டம் விழுந்துவிடுகிறது. பெரும்பாலும் அந்த வட்டத்தை தாண்ட மாட்டோம். கிணற்றுத் தவளைகள் உருவாவது இப்படித்தான். கடைசி வரைக்கும் அப்படியே வாழ்க்கை ஓடி 'பரவால்ல..நானும் வாழ்ந்து முடிச்சுட்டேன்' என்று நிம்மதியடைகிறோம்.
அதுவொன்றும் தவறானதில்லை.
ஆனால் வாழ்க்கையில் வென்றவர்களைப் பார்த்தால், நாம் தொடாத உயரங்களைத் தொட்டவர்களை கவனித்தால் - ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும். தமக்கு முன்பாக இருக்கும் சமநிலையைக் குலைத்துக் கொண்டேயிருப்பவர்கள் மட்டுமே உச்சத்தை தொடுகிறார்கள். 'இதுவே போதும்' என்று மனம் ஓயும் போதெல்லாம் புதியதொன்றை முயற்சித்து பார்த்திருப்பார்கள். நிலத்தில் ஓடுகிற கரையற்ற நீர் மாதிரிதான். தன்பாட்டுக்கு ஓடி நிலத்தால் உறிஞ்சப்பட்டு அமைதியாவதும் உண்டு. இறங்கி பார்த்துவிடலாம் என்று உயரத்திலிருந்து இறங்கி மேடு பள்ளம் பார்த்துவிடுவதும் உண்டு. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?
ஆனால் வாழ்க்கையில் வென்றவர்களைப் பார்த்தால், நாம் தொடாத உயரங்களைத் தொட்டவர்களை கவனித்தால் - ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும். தமக்கு முன்பாக இருக்கும் சமநிலையைக் குலைத்துக் கொண்டேயிருப்பவர்கள் மட்டுமே உச்சத்தை தொடுகிறார்கள். 'இதுவே போதும்' என்று மனம் ஓயும் போதெல்லாம் புதியதொன்றை முயற்சித்து பார்த்திருப்பார்கள். நிலத்தில் ஓடுகிற கரையற்ற நீர் மாதிரிதான். தன்பாட்டுக்கு ஓடி நிலத்தால் உறிஞ்சப்பட்டு அமைதியாவதும் உண்டு. இறங்கி பார்த்துவிடலாம் என்று உயரத்திலிருந்து இறங்கி மேடு பள்ளம் பார்த்துவிடுவதும் உண்டு. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?
'சொல்லிட்டு போயிடலாம்...எவ்ளோ ரிஸ்க் தெரியுமா?' என்று கேட்பார்கள். ஆமாம். ரிஸ்க்தான். ஆனால் அதை முயற்சித்து பார்ப்பவர்கள்தான் புதிய உயரங்களை அடைகிறார்கள். பணம், புகழ் என எல்லாமுமே ஏதாவதொரு ரிஸ்க் எடுப்பதனால் மட்டும்தான் சாத்தியம். நம்முடைய பயத்தை, குழப்பத்தை மீறி வராமல் எதுவுமே சாத்தியமில்லை. 'நான் பாட்டுக்கு இருக்கேன்..வர்றது வரட்டும்' என்று இருப்பவர்களுக்கு பெரிய வெற்றிகள் கிடைப்பதற்கான சாத்தியங்கள் வெகு குறைவு.
சில மாதங்களுக்கு முன்பாக ஒரு நண்பரைச் சந்திக்க வேண்டியிருந்தது. இன்டெல் நிறுவனத்தில் இருந்தந்தவர். நல்ல சம்பளம்தான். விட்டுவிட்டு தனியாக ஒரு நிறுவனம் தொடங்குவதாகச் சொன்ன போது வீட்டில் கடும் எதிர்ப்பு. அடுத்த ஒரு வருடத்துக்காவது வருமானம் எதுவுமில்லை என்கிற நிலைமை. வருமானமில்லாவிட்டாலும் தொலைகிறது. இருக்கும் கைக்காசை எல்லாம் நிறுவனம் நடத்துவதற்கு செலவழிக்க வேண்டும். நிறையப் பேர் அறிவுரை சொல்லியிருக்கிறார்கள். நம் ஊரில் இலவசமாக கிடைப்பது அது மட்டும்தானே?
நான்கு பேர்களைச் சேர்த்துக் கொண்டு வேலையை ஆரம்பித்திருக்கிறார்கள். மற்றவர்கள் முதலீட்டாளர்கள் மட்டும்தான். இவர் மட்டும்தான் முதலீடுதான் சேர்த்து உழைப்பையும் கொடுத்திருக்கிறார். அதனால் இவர்க்கு நிறுவனத்தில் பங்கும் அதிகம். ஒன்றரை வருடங்களில் நிறுவனம் ஒரு வடிவத்துக்கு வந்துவிட்டது. இப்பொழுது மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. 'வருமானம்ன்னு பார்த்தா சம்பளத்துக்கு இருந்ததை விட குறைவதுதான். ஆனால் இதில் ஒரு சந்தோசம் இருக்கு மணி' என்றார். ஒரு நிறுவனத்தை தொடங்கி வடிவத்துக்கு கொண்டு வந்து முப்பது பேருக்கு சம்பளம் கொடுத்து என்று. 'இப்பொழுதே சில பெரிய நிறுவனங்கள் விலை பேசுகின்றன. இன்னமும் கொஞ்சம் கஷ்டப்பட்டால் இன்னமும் நல்ல விலைக்கு விற்க முடியும்' என்று சொன்னார். அவர் அப்படிச் சொன்னதுதான் வெளிச்சம் பாய்ச்சியது.
இன்றைக்கு ஓரளவுக்கு சமநிலை அடைந்திருக்கிறார். யாரோ விலைக்கு கேட்கிறார்கள். கொடுத்துவிட்டு அமைதியாக இருந்துவிடலாம். இன்னமும் இரண்டு மூன்று வருடங்கள் முயற்சிக்கலாம் என்று மீண்டும் சமநிலையை குலைக்கிறார். சாதாரணமாக 'இவ்ளோ நாள் கஷ்டப்பட்டாச்சு..கொடுத்துட்டு நிம்மதியா இருக்கலாம்' என்றுதான் நினைப்பார்கள். இவர் நினைப்பது போல நிறுவனத்தின் விலை கூடும் என்று நம்பவுது பெரிய ரிஸ்க். ஆனால் அந்த ரிஸ்க்தான் அவரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும். இத்தகைய மனிதர்களிடம் பேசுவது நம்மை புதுப்பித்துக் கொள்ள உதவும். நமக்கான பாசிட்டிவ் எனெர்ஜியை நம்மைச் சுற்றி இருப்பவர்களிடமிருந்தே பெற்றுக் கொள்ள முடியும். இவரைப் போன்றவர்கள்தான் அத்தகைய ஊக்குவிப்பாளர்கள். பூஸ்டர்கள்.
வீட்டிலிருந்து கிளம்பும் போது என்ன பேசப் போகிறேன் என்று ஒரு முடிவுக்கு வந்திருந்தேன். ஒரே விஷயம்தான்- ரிஸ்க் எடுக்க மட்டும் பயப்படவே கூடாது. பயமில்லாமல் இருக்குமா? இருக்கத்தான் செய்யும். ஆனால் துணிச்சல்தான் துணை. ஒன்றிரண்டு முறை நமக்குள் இருக்கும் பயத்தை உடைத்துவிட்டால் வாழ்க்கை தன்னுடைய வெவ்வேறு வண்ணங்களைக் நமக்கு காட்டியபடி புன்னகைக்கும்.
7 எதிர் சப்தங்கள்:
தெளிவான சிந்தனை, எழுத்துக்கள் மணி !
நடந்துட்டே இருந்தா போதாதா?
படுத்துட்டே இருந்தாலும் தப்பில்லை. நம் வாழ்க்கை...நாம்தான் முடிவு செய்யணும்...
என்னா கோவம்!!!!!!!!!!!!
நல்ல அறிவுரை, நண்பர் பெங்களுரில் காபி ஷாப் வைக்க பார்ட்னர்ஷப் கேட்கிறார். சமநிலையைக் குலைத்து வியாபாரத்தையும் சைடுல பார்க்க வேணும்.
That breaking off the inertia on continuously seem to be sacrosanct activity in every little activity we do.
The same an...ous.. Breaking the inertia in every little thing... Including breathing.. The most unfortunate thing human addicted to is habits.. We have been told form good habits and leave bad habits.. In fact, not forming any habit is the road to bliss.
Post a Comment