அடர்வனம் அமைப்பதற்கான வேலைகளை மிகத் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கிறோம். குளத்து மண் சரியில்லை. ஒன்றரை அடிக்கு ஆழம் தோண்டினாலும் வெறும் பாறைதான். அடியில் வாழை மட்டைகளைப் போட்டு மேலாக நாற்பது லோடு செம்மண்ணைக் கொட்டியிருக்கிறோம். ஆழ்குழாய் கிணற்றில் மோட்டார் பொருத்தி நீர் பாய்ச்சத் தயாராக இருக்கிறோம். இனி சுற்றிலும் வேலி அமைக்க வேண்டும். ஆட்சியர் அப்பொழுதே அனுமதி கொடுத்துவிட்டார். எழுத்துப் பூர்வமாக அனுமதிக் கடிதம் எதுவும் தரவில்லை. ஆனால் அதை பெற்றுக் கொண்டுதான் அடுத்த வேலைகளை செய்ய வேண்டும்.
தலையும் வாலும் புரியாதவர்களுக்காக-
கோட்டுப்புள்ளாம்பாளையம் என்ற கிராமத்தின் குளத்தை தூர் வாரினோம். சுமார் பதினைந்தாயிரம் லோடு மண்ணை எடுத்த பிறகு குளம் வெகு ஆழமானது. நீரும் நிரம்பியது. பக்கத்திலேயே ஏதாவது செய்யலாம் என்று அரசிடம் அனுமதி வாங்கி இருபத்து நான்கு சென்ட் இடத்தில அடர்வனம் அமைக்கிறோம். அடர்வனம் என்பது ஜப்பானிய முறை. வெகு நெருக்கமாக மரங்களை நட்டு அமைக்கப்படும் வனம். இருபத்து நான்கு சென்ட் இடத்தில இரண்டாயிரம் மரங்களை நடுவதாகத் திட்டம்.
அதற்கான ஏற்பாடுகள்தான் முதல் பத்தியில் சொன்னது. ஓர் அதிகாரி வந்து பார்த்துவிட்டு 'இப்போ இருக்கிற அதிகாரிகள் சரின்னு சொல்லிட்டாங்க..நாளைக்கு புதுசா வர்ற பஞ்சாயத்து பிரசிடெண்ட் மரத்தை வெட்டுறோம்ன்னு தீர்மானம் போட்டா எப்படி தடுப்பீங்க' என்று கேட்டார். சரியான கேள்வி. நம்மவர்கள் செய்தாலும் செய்வார்கள். அந்தச் சமயத்தில் தடுக்க வேண்டுமானால் தண்டவாளத்தில்தான் தலை வைக்க வேண்டும். அதனால் ஆட்சியரைச் சந்தித்து கடிதம் கேட்கவிருக்கிறோம்.
அது ஒரு பக்கம்.
இன்னொரு பக்கம் நாற்றுக்களைத் துழாவிப் கொண்டிருக்கிறோம். இரண்டாயிரம் நாற்றுகளையும் நாட்டு மரங்களாக வேண்டும். இந்த மண்ணுக்குரிய மரங்கள்; அழியும் தருவாயில் இருக்கும் மரங்கள் எனத் தேடித் பிடித்து நட்டுக் காப்பாற்றிவிட்டால் போதும். அடுத்த தலைமுறைக்கு கொடுத்த மாதிரி இருக்கும். விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டும். ஆனால் நாற்றுகள்தான் இல்லை.
நண்பர் ஜெயராஜ் மரக்காணம் பக்கத்தில் தேடிக் கொண்டிருக்கிறார். நிசப்தம் தளத்தை தொடர்ச்சியாக வாசிப்பவர்களுக்கு ஜெயராஜ் பற்றித் தெரிந்திருக்கும். சென்னை, கடலூர் வெள்ளத்தின் போது நிசப்தம் அறக்கட்டளையின் சார்பில் செய்யப்பட்ட பணிகளுக்கு தூணாக இருந்தவர். பொருட்களை வாங்குவதில் தொடங்கி பிரித்து, பொட்டலம் கட்டி, ஸ்டிக்கர் ராஜாக்களின் கண்களில் மண்ணைத் தூவி பாதிக்கப்பட்ட இடங்களுக்கு எடுத்துச் சென்று விநியோகிப்பது வரைக்கும் அத்தனைக்கும் ஜெயராஜும் அவரது அணியும்தான் காரணம். லேசுப்பட்ட காரியமில்லை.
அடர்வனம் திட்டத்திலும் தம்மை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே அவரும் பாவாவும் வழக்கறிஞர் ஸ்ரீனிவாசனும் செங்கல்பட்டு சுற்றுவட்டாரத்தில் ஒரு முறை தேடித் பார்த்து இருக்கும் செடிகளின் எண்ணிக்கை, விலை ஆகியவற்றின் பட்டியல் தயாரித்துவிட்டார்கள். ஆனால் அது போதாது. ஒவ்வொரு வகையிலும் அதிகபட்சம் நாற்பது செடிகள் வைக்கலாம். அப்படியென்றால் ஐம்பது அல்லது அறுபது வகையாவது கிடைக்க வேண்டும். இப்பொழுது முப்பத்தைந்து வகை மரங்களைத்தான் கண்டறிந்திருக்கின்றோம்.
ஜெயராஜுடன் சேர்ந்து செடிகளை வாங்க வேண்டும். ஆனந்த் பொறியியல் முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர். விவசாயத்தில் ஆர்வமிக்கவர். ஏற்கனவே ஒரு அடர்வனத்தை வெற்றிகரமாக அமைத்தவர். எனக்கும் ஜெயராஜூவுக்கும் மரங்களைப் பற்றி எதுவும் தெரியாது. 'நீங்க வர முடியுமா?' என்று கேட்டேன். 'வர்றங்கண்ணா' என்று சொல்லியிருக்கிறார். மரங்கள் குறித்த அவரது அறிவு ஆச்சரியப்படுத்துகிறது. அருணாச்சலம் இன்னொரு ஆலோசகர். நாங்கள் மூவருமாகச் சேர்ந்து இந்த வாரம் மரக்காணம் பக்கத்தில் செடிகளைத் தேடப் போகிறோம்.
அருணாச்சலம் எங்களின் இன்னொரு ஆலோசகர். அதே போல மாவட்ட வன அலுவலர் பிரபாகரனைச் சந்திக்க பழனிசாமியும், கணேசமூர்த்தியும் இந்த வேகாத வெயிலில் பைக்கிலேயே அறுபது கிலோமீட்டர் தூரம் வரைக்கும் செல்கிறார்கள். நினைத்தாலே மண்டை காய்கிறது. திங்கட்கிழமை அதுவுமாக சொந்த வேலையெல்லாம் விட்டுவிட்டு இந்த வெக்கையில் அலைய வேண்டும் என்று அவர்களுக்கு தலையெழுத்தா என்ன? 'உங்களை சிரமப்படுத்துறேன்' என்று சொன்னால் 'நீங்க இப்படிச் சொல்வதுதான் சிரமப் படுத்துகிறது' என்கிறார்கள்.
அருணாச்சலம் எங்களின் இன்னொரு ஆலோசகர். அதே போல மாவட்ட வன அலுவலர் பிரபாகரனைச் சந்திக்க பழனிசாமியும், கணேசமூர்த்தியும் இந்த வேகாத வெயிலில் பைக்கிலேயே அறுபது கிலோமீட்டர் தூரம் வரைக்கும் செல்கிறார்கள். நினைத்தாலே மண்டை காய்கிறது. திங்கட்கிழமை அதுவுமாக சொந்த வேலையெல்லாம் விட்டுவிட்டு இந்த வெக்கையில் அலைய வேண்டும் என்று அவர்களுக்கு தலையெழுத்தா என்ன? 'உங்களை சிரமப்படுத்துறேன்' என்று சொன்னால் 'நீங்க இப்படிச் சொல்வதுதான் சிரமப் படுத்துகிறது' என்கிறார்கள்.
அடர்வனம் அமைப்பது என்பது ஆரம்பத்தில் எளிமையான காரியமாகத் தெரிந்தது. ஆனால் மிகக் கடுமையான உழைப்பைக் கோரும் செயல் இது. நாற்றுக்களைச் சேகரித்துவிட்டால் அக்னி நட்சத்திரம் முடிந்தவுடன் நட்டுவிடலாம். எப்பொழுதும் சொல்வது போல உண்மையிலேயே ஏகப்பட்டவர்களின் உழைப்பு இருக்கிறது.
'உனக்கு எத்தனை மரங்கள் தெரியும்?' என்று ஒரு பேராசிரியர் கேட்டார். இருபத்தைந்து மரங்களின் பெயர்களைச் சொல்லலாம். அவ்வளவுதான் அடையாளமும் தெரியும். அதற்கு மேல் தெரிய வாய்ப்பில்லை. நாட்டு மரங்களின் வகைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். பல மரங்களின் பெயரை இப்பொழுதான் கேள்விப்படுகிறேன். வாழ்நாளில் ஐநூறு வகை மரங்களையாவது அடையாளப்படுத்துகிற அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதைக் கூடாது தெரிந்து கொள்ளவில்லையென்றால் 'இயற்கை மீது ஆர்வம்' என்று சொல்வதற்கே அர்த்தமில்லை. வெறுமனே உடான்ஸாகத்தான் இருக்கும்.
- புளி
- புங்கை
- புன்னை
- ஆலம்
- அரசு
- ஒதியன்
- கொன்றை
- பின்றை
- நுணா
- வாகை
- பூவரசு
- கருவேலம்
- கருவேப்பிலை
- வேம்பு
- நாவல்
- தேக்கு
- மா
- பலா
- தென்னை
- பனை
- நாகலிங்கம்
- ஆச்சா
- நெல்லி
- உசில்
- வேங்கை
- மருதம்
- தடசு
- இலுப்பை
- தோதகத்தி
- வன்னி
- குமிழ்
- கடுக்காய்
- தாண்டி
- விளா
- அத்தி
- தாழை
- அகில்
- இலவம்
- தேவதாரு
- கடம்பம்
- சால்
- செண்பகம்
- பலாசு (புரசு)
- காட்டாத்தி
- இருவாட்சி
- மாவிலிங்கம்
- குடைவேலம்
- அகத்தி
- வில்வம்
- எட்டி
- தும்பை
- இலந்தை
- கடுக்காய்
- கிளுவை
- கருங்காலி
- குருந்த
- கோங்கு
- நாரத்தை
- தில்லை
- தேற்றா
- பராய்
- பன்றீர்
- பாதிரி
- பாலை
- மகிழம்
- மூங்கில்
- பப்பாளி
மேற்சொன்ன மர நாற்றுக்கள் எங்கேயாவது இருந்து (ஓரடிக்கு மேலான உயரம் இருந்தால் உசிதம்) தெரியப்படுத்தினால் பேருதவியாக இருக்கும். பாறை மண் என்பதால் சிறுசெடிகள் மேலே வருவது சிரமம் என்கிறார்கள். அதனால் சற்று வளர்ந்த செடிகளாகத் தேடுகிறோம். பட்டியலில் இருப்பது தவிர வேறு எந்த நாட்டு வகை மரங்கள் இருந்தாலும் தெரியப்படுத்தவும். எப்படி பெற்றுக் கொள்வது என்று பிறகு முடிவு செய்து கொள்ளலாம். ஒரு அடர்வனத்தை அமைந்துவிட்டால் போதும். எந்தச் செடி எங்கே கிடைக்கும் என்பதில் ஆரம்பித்து நிலத்தை தயார் செய்வது வரை எல்லாவற்றையும் ஆவணப்படுத்திவிடுவேன். யார் வேண்டுமானலும் அமைக்கும்படியான ஆவணமாக அது இருக்க வேண்டும்.
23 எதிர் சப்தங்கள்:
In velachery forest nursery they give saplings of about 3-4 varieties grown around 5 ft. Three months back i got sissoo poovarasu nizhal vaagai and maruthu saplings
Please contact:
Vanam India Foundation
Lions Club Building, Opp to Power house,
Udumalai Road, Palladam - 641664
trustvanam@gmail.com
Mobile - 75986 11455
I am eagerly awaiting for this document. My best wishes.
Murungai maram enga boss?
நமக்கு போட்டியாக ஒரு பாக்யராஜ் ரசிகரா?:) will add it to the list.
ங் "கொய்யா" வ
சேக்கல போல.
அப்புறம் இந்த மஞ்சணத்தி.
கொடிக்காய் மரம்,
உசிலை மரம், நிலவேம்பு,
"அந்தச் சமயத்தில் தடுக்க வேண்டுமானால் 9தண்டவாளத்தில்தான் தலை வைக்க வேண்டும்". 32.கடுக்காய். 53.கடுக்காய்.....
வாழ்க வளமுடன்
Kadukkai is repeated twice. Also you can find Nunaa and few other varieties in Surabhi Nursery, Permanallur.
Incidentally I along with few other friends are visiting kullegounden palayam Miyawaki Forest tomorrow. Will get in touch to see if we can join in your efforts and also learn a thing or two.
Manjanathi and Nunaa are same isn't it?
There is government owned Nursery near hebbla Lake. Try there for saplings
I heard few plants avilable in isha nursery at Thasampalayam,gobi..contact no : 9442590072
Near Arimalam lot of Nurseries available.cost 2to5Rs.
Contact sellaiya9942818629
Malai Vembu,Chanthanam ?,Vathanan or Vatha Narayana(not vaagai),Vela Maram(not Karu Velam). I will arrange the stem cuttings of Kiluvai,Vathanan maram and 5 coconut saplings.
மரமல்லி மரம் விடுபட்டுள்ளது
கொடுக்காப்புளி
Sir, Kodukapuli maram add panikonga
Holoptelea integrifolia - ஆய மரம், (ஆயில், அவில்) - Aaya maram
Contact :
Mr. vanabharathi Mohan, ambasamthuram, Tirunelveli
Mob : 82480 86187
வாதநாராயணன் (வாதநாரா மரம்)
நொச்சி
அப்பறம் இந்த செம்மரம், சந்தன மரம் எல்லா வைக்க மாட்டேலா??
District Forest Office
Government office in Tamil Nadu
Address: Thiruchi-Thanjavur Road, Thanjavur, Tamil Nadu 613005
Hours: Closes soon: 5PM ⋅ Opens 10AM Fri
Phone: 04362 227 308
http://www.projectgreenhands.org/nurseries/corporate-nurseries
The following corporates have collaborated with us
Aravind herbals, Virudhunagar.
TTK-LIG Limited, Virudhunagar.
Dindigul Saboul
Golden Constructions, Villupuram.
L & T Ltd, Chennai.
Scope International, Chennai.
Veera export, Kanchipuram.
Integra Automation, Coimbatore.
Pattukottai Omkar Foundation, Thanjavur.
Sri Shanmukha industries, Tirpur.
http://www.projectgreenhands.org/nurseries/educational-nurseries
Hindu middle school, Theni
Government primary School, Karur
Government High School, Thiruvanamallai
Puttur Government High School, Krishnagiri.
Girls Higher secondary school, Erode
Sideshwara, Girls Higher secondary school, Namakkal.
Government Girls higher secondary school, Thiruchengode.
Kalisalingam University, Virudhunagar
Tuticorin Fisheries College
Yadava arts & Science College, Madurai.
Stanley medical College. Chennai.
Jain College ,Chennai
Chidambaram Annamalai university, Cuddalore
Isha Vidhya Matriculation School, Villupuram, Nagercoil, Salem, Coimbatore, Erode and Cuddalore
Post a Comment