ஒரு விஷயம் சொல்ல வேண்டும். சமீபகாலமாக இரண்டு திரை இயக்குநர்களுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இயக்குநர் யார், என்ன படம் என்பதையெல்லாம் இப்பொழுதே வெளியில் சொல்லலாமா என்று தெரியவில்லை. இரண்டு இயக்குநர்களையும் சந்திக்கப் போகிறேன் என்பது முந்தின நாள் வரைக்கும் தெரியாது.
விகடனில் வாட்ஸப் வக்கிரங்கள் என்ற ஒரு கட்டுரை வந்திருந்த சமயத்தில் உதவி இயக்குநர் வேல்முருகன் அழைத்து ‘நான் இன்னாருடைய உதவியாளர் பேசுகிறேன். நிசப்தம் வாசிப்பதுண்டு. எங்கள் இயக்குநரிடம் உங்களைப் பற்றி பேசியிருக்கிறேன். சந்திக்க விரும்புகிறார்’ என்றார். அந்த வார இறுதியில் சென்னையில்தான் இருந்தேன். ‘நாளைக்கு பார்க்கலாமா?’ என்று கேட்டுவிட்டு வடபழனியில் அவருடைய அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம். முதல் சந்திப்பில் பொதுவான விஷயங்களைத்தான் பேசினோம். பிறகு அவ்வப்பொழுது பேசிக் கொண்டோம். இயக்குநர் நிசப்தம் வாசிக்கத் தொடங்கினார். அவருடைய முந்தைய படத்தைத்தான் தெலுங்கில் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் நேரடி தெலுங்குப்படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இரும்பு அடிக்கிற இடத்தில் எலிப்புழுக்கைக்கு என்ன வேலை என்று உங்களுக்கு வரக் கூடிய அதே சந்தேகம்தான் எனக்கும். தெலுங்கு அரைகுறையாகத்தான் தெரியும். ‘நீங்க உங்க நக்கல் தொனியை வைத்துக் கொண்டு தமிழிலேயே எழுதிக் கொடுங்க..அந்த inputsஐ தெலுங்கில் பயன்படுத்திக் கொள்கிறோம்’ என்றார். எல்லாவற்றிலும் கற்றுக் கொள்ள ஏதாவது இருக்கும். தெலுங்காக இருந்தால் என்ன? மலையாளமாக இருந்தால் என்ன? வருகிற வாய்ப்பைப் பிடித்துக் கொள்ள வேண்டும். எழுதிக் கொடுத்திருக்கிறேன். அதிலேயே இன்னமும் நிறைய வேலை இருக்கிறது. திரும்பத் திரும்ப சரி செய்து கொடுத்தபடியே இருக்கிறேன்.
மற்றொரு இயக்குநர் தமிழின் முக்கியமான இயக்குநர். அவர் இயக்கியவற்றில் பெரும்பாலானவை கவனிக்கப்பட்ட அல்லது வெற்றியடைந்த படங்கள். சில வாரங்களுக்கு முன்பாக வேறொரு வேலையாக சென்னையிலிருந்த போது மகுடபதியை அழைத்து ‘சென்னை வந்திருக்கேன்...நீங்க எங்க இருக்கீங்க?’ என்றேன். மகுடபதி நல்ல நண்பர். இயக்குநருக்கும் நண்பர். மகுடபதி என்னிடம்‘டிஸ்கவரி புக் பேலஸூக்கு வர முடியுமா?’ என்றார். அந்தச் சந்திப்பின் போது இயக்குநரும் இருந்தார். வெகு எளிமையாகப் பேசிய இயக்குநர் ஒற்றை வரியைச் சொல்லி அது குறித்து யோசிக்கச் சொல்லியிருந்தார். ஊருக்கு வந்த பிறகு அலைபேசி வழியாக அவரிடம் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டேன். பெரும்பாலானவை மண்டைக்குள் புதைத்து வைத்திருந்த உண்மைச் சம்பவங்கள் அல்லது நிசப்தத்தில் எழுதியவற்றின் நீட்சி. அவருக்கு பிடித்திருந்தது. வளசரவாக்கத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்து கொடுத்துவிட்டு ‘நீங்க இந்தப் படத்துல வேலை செய்யுங்க’ என்று சொல்லி பணம் கொடுத்தார். ஒற்றைத் தாளை மட்டும் வாங்கிக் கொண்டேன். அதே கணக்குத்தான். பணம் பிரதானமில்லை. ‘உங்ககிட்ட வேலை செய்வதுதான் முக்கியம். நீங்க படம் ஆரம்பிக்கும் போது சம்பளம் கொடுங்க’ என்று சொல்லிவிட்டு வெகு தீவிரமாக தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். கதை விவாதத்தில் கலந்து கொள்கிறேன். ஒற்றை வரியைப் பிடித்துக் கொண்டு மொத்தக் கதையையும் அடித்துத் திருத்துகிற இது வித்தியாசமான அனுபவம்.
உண்மையைச் சொன்னால் இந்தப் படங்களில் என்னுடைய வேலை என்னவாக இருக்கும் என்பதெல்லாம் இப்பொழுது தெரியவில்லை. அது குறித்தான யோசனையும் பெரிதாக இல்லை. கற்றுக் கொள்கிறோம். அவ்வளவுதான். பணம், புகழ் உள்ளிட்டற்றவற்றைக் கணக்குப் போட வேண்டியதில்லை. சினிமாவைப் பொறுத்தவரையில் எதுவுமே நிகழ்ந்தால் மட்டுமே உண்மை. திரையில் பெயர் மின்னுகிற வரைக்கும் எதுவுமே கற்பனை மாத்திரம்தான் என்பதால் இப்பொழுதே இது குறித்துப் பேச வேண்டியதில்லை என்றுதான் நினைத்தேன். ஆனால் இதை நிசப்தம் தளத்தில் சொல்லிவிட வேண்டும் எனத் தோன்றியது. இங்கு எழுதுகிற பயிற்சியும் அதன் வழியாகக் கிடைக்கக் கூடிய நண்பர்களும் வாசகர்களும்தான் எனது பாதையையும் திசையையும் உருவாக்கிறார்கள் என்று சொன்னால் அதில் ஒரு சதவீதம் கூட மிகைப்படுத்துதல் இருக்க முடியாது. எழுத்து, அறக்கட்டளை, சினிமா என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நிசப்தம் வழியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் எல்லாவற்றையும் இதன் வழியாகத்தான் அறிவிக்க வேண்டும்.
நேற்று எனக்குப் பிறந்தநாள்.
முப்பத்து நான்கு வயது முடிகிறது. இதுவரையிலும் கிடைத்திருப்பனவற்றில் பெரும்பாலானவை நான் எதிர்பார்க்காதவை, தகுதிக்கு மிஞ்சியவைதான். சாதனையைச் செய்துவிட்டதான அர்த்தத்தில் இதைச் சொல்லவில்லை. பயணிக்க வேண்டிய தூரம் வெகு தொலைவு என்பதை உணர்ந்திருக்கிறேன். ஆனால் சில காரியங்கள் நம்மையும் மீறி நடந்து கொண்டேயிருக்கும். கிடைக்கிற வாய்ப்புகளும் கூட அப்படித்தான். யாராவது ‘உன் எதிர்காலத் திட்டம் என்ன?’ என்று கேட்டால் என்னால் பதில் சொல்லவே முடியாது. செய்கிற வேலையை அர்ப்பணிப்புடன் செய்து கொண்டிருப்போம். எது நடக்க வேண்டுமோ அது நிச்சயமாக நடந்தே தீரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.
இந்த வாரம் சென்னை புத்தகக்கடையில் சந்தித்த நண்பரொருவர் ‘எப்படி குடும்பம், வேலை, எழுத்து, அறக்கட்டளைன்னு எல்லாத்தையும் இழுத்துப் போட்டுக்குறீங்க?’ என்றார். உண்மையைச் சொன்னால் நிற்க நேரமில்லாமல் சுழல்வதைப் போன்ற சந்தோஷம் வேறில்லை. அதை அனுபவித்துப் பார்த்த பிறகு ஒரு நாள் வேலையில்லாமல் இருப்பது கூட குற்றவுணர்ச்சியை உருவாக்குகிறது. அதனால் இன்னமும் இருமடங்கு வேலை இருந்தாலும் கூட சந்தோஷமாகத்தான் செய்வேன் என நினைக்கிறேன். இந்த வயதில் சுழலாமல் எந்த வயதில் சுழல்வது?
இந்தப் பிறந்தநாள் எனக்கான இன்னொரு திசையையும் காட்டுவதாகத்தான் தெரிகிறது. பயணித்துப் பார்த்துவிடலாம். முழுமையான விவரங்களை தக்க தருணத்தில் சொல்கிறேன்.
எதிர்மறையான குணங்கள் சூழ்ந்த இந்த உலகில் ‘இவன் நல்லா இருக்கட்டும்’ என்று நான்கு பேராவது நினைப்பதுதான் நம்மைத் தாங்கிக் கொள்கிறது. அப்படியானவர்களைச் சம்பாதித்து வைத்தால் போதும். மற்றவை தானாக நடக்கும்.
வாழ்த்திய நண்பர்களுக்கும், ஆசிர்வதித்த பெரியவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி. உடனிருக்கும் அத்தனை பேருக்கும் என் அன்பும் பிரியங்களும்.
34 எதிர் சப்தங்கள்:
Belated wishes
காட்சி மாறுகிறது! கதை, திரைக்கதை, வசனம், ........தமிழக முதல்வர்..............கலைஞர் இடம் காலியாக இருக்கிறது. :)
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்,.... உங்களால் சாதிக்கமுடியும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது...ஒரு செயலை செய்வது என்று முடிவு செய்த பிறகு, முழு முயற்சியில் ஈடு படுவதுதான் சிறப்பு.... நட்புடன் -கோகி ரேடியோ-மார்கோனி... புது தில்லியிலிருந்து
மணி,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வாழ்வில் மேன்மேலும் வெற்றிகள் கிட்டட்
உங்கள் எளிமையான எழுத்தும் தொடராட்டும்.
உங்கட Kajalஆ கதாநாயகி?☺️
Great! and best wishes
வாழ்த்துகள்! தாமதமான வாழ்த்துகள் என்றாலும் எல்லா நாளும் பிறந்தநாள்தான். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியிலும் நாம் புதிய புதிய பாடங்களை, அனுபவங்களைக் கற்றுக் கொள்வதால்.
இந்தப் பிறந்த நாள் தங்களுக்குத் தாங்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றியடைய வழிவகுக்கும் ஒரு நல்ல நாளின் தொடக்கமாய் அமைய வாழ்த்துகின்றோம்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! அர்ப்பணிப்புடன் செய்தால் கண்டிப்பா எதிலும் வெற்றிப்பெற முடியும். உண்மைதான்... உங்கள் நம்பிக்கை வெற்றிபெற வாழ்த்துகள்...!
Vaazhthukkal. Neengal annum sigaram thoda pogireergal.Santhashamai irukkitathu
Balu
happy birthday mani....
All the very best for your another journey..(flim industry)
காலங்கடந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பரே. உங்கள் அர்ப்பணிப்பு மிக்க செயல்களால்,வாழ்க்கை மிகவும் பிரகாசமாக ஒளி வீச என் மனப்பூர்வமான ஆசிகள்.
All the very best. But take care in all aspects.
கலக்குங்க பிரதர்! :)
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் மணி. :)
Happy Birthday Mani...
Best wishes and belated happy birthday 😊 Anna
வாழ்த்துக்கள் மணி
என் பங்கை சரியா அனுப்பி வச்சிருங்க.
இல்லேன்னா கட்சி ஒடைக்கப்படும். தனிக்கட்சி ஆரம்பிக்கப்படும்.
எதிர் தரப்புல ஆறு மந்திரி பதவியும், ரெண்டு நியமன பதவியும் காத்துகிட்டு இருக்கு.
Valthukal.. Apa epdiyum kajal agarwala...... parthuruvinga palakiduvinga :-)
All the best!!
இனிய பிறந்த (காலம் தாழ்ந்த) பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!! வாழ்க வளமுடன் :)
Porantha naal vaazhthukkal Mani avargale. Ungalargy seeriya pani thirai ulagathaiyum military veikkattum.
Pogum paadhai thooram. Kooraiyaai neela vaanam
Belated birthday wishes Mani
Belated Birthday wishes Mani..
Regards,
Senthil,BLR
valthukkal.. unga sirapa pani engum thodaratum
Belated Birthday wishes Mani Sir...
வாழ்த்துக்கள் மணி.
// இல்லேன்னா கட்சி ஒடைக்கப்படும். தனிக்கட்சி ஆரம்பிக்கப்படும் //
சேக்காளி என்ற பெயர் பொருத்தமாக இல்லை, எனவே பிரிக்காளி அல்லது உடைக்காளி என்று மாற்றிக்கொள்ள வலுவாக பரிந்துரைக்கப்படுகிறது :)
Dear Mani.
Wish you happy Birthday.
Sivam
Belated wishes..
Best Wishes!
@பொன்.முத்துக்குமார்
//சேக்காளி என்ற பெயர் பொருத்தமாக இல்லை, எனவே பிரிக்காளி அல்லது உடைக்காளி என்று மாற்றிக்கொள்ள வலுவாக பரிந்துரைக்கப்படுகிறது//
பொதுக்குழு கூட்டி முடிவெடுக்கப்படும்.
வாழ்த்துகள்.உங்கள் தளத்தை தொடர்ந்து வாசிக்கிறேன்.எழுத்துத்துறையில் பல சந்தேகங்களை எனக்கு தெளிவாக்கியது.வாசிப்பு எழுத்து இலக்கியம் தொடர்பாக என் சில கருத்துகளை பகிர எப்படி உங்களைத் தொடர்பு கொள்வது?
நன்றி
மோனிகா மாறன்
All the best to you!
Belated Birthday wishes..
You are absolutely right - we must keep ourselves busy. Grab the opportunities and you are sincere and you will learn things and also give your best!
Keep Going! Great!
Wish you all the very best Mr.Mani!!
You will certainly reach even great heights!!
Belated birthday wishes Mr Manikandan.
You are in the prime of your youth. This is when , one can achieve what one desires.
You have tremendous clarity of thought and you appear very grounded too.
Here's wishing you and your family the very best.
I am looking forward to meet you some time.
Regards
Shankar
Post a Comment