ஞாயிற்றுக்கிழமை மதியம் செங்கல்பட்டிலிருந்து திரும்பி வரும் போது மதுராந்தகம் ஏரிக்கு பக்கத்தில் படகுகளோடு போலீஸார் நின்றிருந்தார்கள். ஒரு தீயணைப்பு வண்டியையும் நிறுத்தி வைத்திருந்தார்கள். ‘என்ன பிரச்சினை’ என்று விசாரித்த போது ‘சும்மா அலர்ட்’ என்றார்கள். நெஞ்சுக்குள் திக்கென்றுதான் இருந்தது. புயல் மையம் கொண்டிருப்பதாகவும் மதுராந்தகம் அச்சிறுபாக்கம் உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு இருக்கும் என்றார்கள்.
மழையைக் காணவில்லை. இரவு எட்டு மணிவாக்கில் நீர்பெயர் என்கிற இடத்துக்குச் சென்றிருந்தோம். அச்சிறுபாக்கத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டரில் உள்ளடங்கிய கிராமம் அது. கடைகளிலிருந்து வாங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை லாரிகளிலிருந்து இறக்கி வைப்பதற்காக பதினைந்து பேர்கள் சென்றிருந்தோம். பதினைந்து நிமிடங்களுக்கு மழை அடித்துப் பெய்தது. மின்சாரமும் இல்லை. அந்த இருட்டு கடுமையானதாகத் தெரிந்தது. சிறிய கடைக்கு முன்னால் இருந்த கூரைக்கு அடியில் நின்று ஈரத்தை சுவாசித்துக் கொண்டிருந்தோம்.
தெரியாத ஊரில் பெய்யும் பேய் மழையும் கடும் இருட்டும் பயமூட்டுகின்றன. மற்றவர்கள் இயல்பாக நின்று கொண்டிருந்தார்கள். எனக்குத்தான் பயம். புது மண் உருவாக்கியிருந்த பயம் அது. மழை சற்று ஓய்ந்ததும் நிம்மதியாக இருந்தது. பள்ளி வளாகத்திற்குள் ஓடினோம். பெரும் வளாகம். பாதிரியார் ஒதுக்கித் தந்திருந்தார். லாரியையும் டாட்டா ஏஸ் வண்டியையும் கொண்டு வந்து வாயிலில் நிறுத்தி அவற்றிலிருந்த பொருட்களை இறக்கி வைக்க ஆரம்பித்தோம். அந்த வேலையைச் செய்வதற்காக வந்திருந்த அத்தனை பேரும் அவ்வளவு உற்சாகமாக இருந்தார்கள். மழையில் நனைந்திருந்தார்கள். மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது. யாருமே இரவு உணவு உண்டிருக்கவில்லை. மின்சாரம் விட்டு விட்டு வந்தது. ஆனாலும் அவ்வளவு வேகம். ஐம்பது கிலோ மூட்டையைத் தூக்கியபடி சர்வ சாதாரணமாக ஓடினார்கள். ‘இவர்களையெல்லாம் எது இணைக்கிறது?’ என்று யோசனையாகவே இருந்தது. நெகிழ்ச்சியாகவும் இருந்தது. இப்படியானவர்கள் உடனிருந்தால் எவ்வளவு பெரிய பொறுப்பையும் துணிந்து செயல்படுத்தலாம்.
எல்லாவற்றையும் இறக்கி வைக்க நள்ளிரவு ஒரு மணியாகிவிட்டது. அதன் பிறகு சாலையோரக் கடையில் இரண்டு புரோட்டாவும் சால்னாவும் விழுங்கிவிட்டு பேருந்தில் ஏறி அமர்ந்தேன். அடித்து வீசியது போல இருந்தது. பெங்களூர் வந்த பிறகுதான் விழிப்பு வந்தது. அவ்வளவு களைப்பு. ஆனால் மற்றவர்கள் ஓய்ந்த மாதிரியே தெரியவில்லை. இன்று அதிகாலையிலேயே பொட்டலங்களைப் பிரித்துக் கட்டும் வேலையை ஆரம்பித்துவிட்டதாக ஜெயராஜ் சொன்னார். சென்னையிலிருந்து ரவிச்சந்திரன் இரண்டு பேர்களை அனுப்பி வைத்திருக்கிறார். மதுரையிலிருந்து மணிகண்டன் அச்சிறுபாக்கம் சென்றிருக்கிறார். மனோஜ் சென்னையிலிருந்து வந்து வேலை செய்திருக்கிறார். ‘முப்பது பேருக்கு மேல வேலை செய்யறோம்....முடிச்சுட்டு சொல்லுறேன்’ என்று ஜெயராஜ் சொன்னார். வேலையைப் பக்காவாக முடித்துவிடுவார்கள். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
ஐயாயிரம் கிலோ கிராம் அரிசியை ஐந்தந்து கிலோவாகப் பிரித்து பொட்டலம் கட்டும் வேலையை காலையிலேயே முடித்துவிட்டதாகச் சொன்னார்கள். அதுதான் பெரிய ஆச்சரியம். தனித்தனியாக எடை போட்டு பிரித்துக் கட்ட வேண்டும் . அது சிரமமான வேலையாக இருக்கும் என நினைத்திருந்தேன். அதன் பிறகு சாக்குப்பைகளை வரிசையாக அடுக்கி வைத்து ஒவ்வொரு ஆளும் ஒரு பொருளை எடுத்துக் கொண்டு வரிசையாக நிரப்பிக் கொண்டே வர வேண்டும். ஒவ்வொரு மூட்டையிலும் முப்பது பொருட்கள் இருக்கும். ஆயிரம் மூட்டைகள். இதுவரைக்கும் பதின்மூன்று பொருட்களை நிரப்பியிருக்கிறார்கள். இரவு எட்டு மணிக்கு அழைத்த போதும் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ‘இன்னைக்கு இது போதும். சிரமப்படாதீங்க...தூங்குங்க..நாளைக்குப் பார்த்துக்கலாம்’ என்றால் கேட்பதாகத் தெரியவில்லை.
கடலூரிலும் சென்னையிலும் இடங்களைக் கிட்டத்தட்ட முடிவு செய்தாகிவிட்டது. நாளைக்கு உறுதியாகத் தெரிந்துவிடும். பொருட்களை மூட்டை கட்டும் வேலையை அநேகமாக நாளைக்கு முடிக்கக் கூடும். ஒரு நாள் ஓய்வுக்குப் பிறகு அநேகமாக வியாழக்கிழமையன்று கடலூரிலும் வெள்ளிக்கிழமையன்று சென்னையிலும் நிவாரணப் பொருட்களை வழங்கிவிடலாம்.
நள்ளிரவில் மேல்மருவத்தூர் இரவில் சாலையில் நின்று கொண்டிருந்த போது நிவாரண வண்டிகள் வரிசையாகச் சென்று கொண்டேயிருந்தன. நிவாரணப் பொருட்கள் பிரச்சினையில்லை. குவிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதன் மூலம் சென்னையில் நிரம்பப் போகும் குப்பையை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. பெரும்பாலும் பாலித்தீன் பைகள்தான் உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான டன் பாலித்தீன் பைகளால் சென்னை நிரம்பவிருக்கிறது. அதன் சாக்கடைகள் அடைக்கப்படவிருக்கின்றன. நிலத்தில் ஒரு பாலித்தீன் பேய் ஒரு படலமாக படியவிருக்கிறது. இதை நாமும் யோசிக்கவேயில்லை. நான்கு நாட்களுக்கு முன்பாக நினைத்திருந்தாலும் கூட ஏதாவது யோசித்துச் செய்திருக்கலாம். இப்பொழுது வாய்ப்பில்லை. வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்தத் தவறு அடுத்த முறை நிகழாமல் பார்த்துக் கொள்ளலாம் என உறுதியெடுத்துக் கொள்ளலாம்.
வேலை செய்து கொண்டிருக்கும் அத்தனை ஆர்வலர்களுக்கும் நன்றி. தாள் வணங்குகிறேன்.
17 எதிர் சப்தங்கள்:
உதவிக்கு செல்லும் நல்லுள்ளங்களுக்கு
சில வேண்டுதல்கள்...
இயற்கை தன் இயல்பை இழந்தாலும்
மணிதம் இன்னும் மரிக்கவில்லை
என்பதை நிரூபித்து கொண்டிருக்கும்
நல்லுள்ளங்களே... கொஞ்சமல்ல
நிறையவே நாம் ஜாக்கிரதையாக
செயல்பட வேண்டிய தருணம் இது...
அதன் காரணமாகவே உங்களுக்கு இந்த
வேண்டுதல்கள்..
1) பலனை எதிர்பாராமல் களப்பணியில் உள்ள அனைவரும் எதிபாராத சில இடர்பாடுகள் வரும் எனும் எச்சரிக்கையுடன், தாங்கள் உள்ள இடத்திலிருந்து உடனடியாக வெளியேறும் வழியை அறிந்து வைத்திருக்கவும்.
2) இன்னும் ஒரு பெருமழை வரும் புதனன்று வருமென BBC யிலிருந்து எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக ஒன் இந்தியா இணையதளத்தில் இன்று தகவல் வந்துள்ளது. மக்களுக்கு உதவ சென்றுள்ள தாங்கள் தங்கள் அலைபேசியை எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் தங்களால் பேச இயலாத சூழலில் இருந்தாலும், தங்களுடைய அலைபேசியை எடுத்து பேச ஒரு உதவியாளரை தயவு செய்து உடன் வைத்திருக்கவும்... காரணம் தங்களுக்கு உதவவோ அல்லது தங்களின் உதவியை எதிர்பார்த்தோ அழைப்புகள் வரும் நிலையில் எடுக்க இயலாமல் போனால் தங்களின் சீரிய முயற்சி வீணாக விமர்சனங்களுக்குள்ளகிவிடுமே எனும் அச்சத்திலேயே இதை பகிர்கிறேன்..
3) தகவல் தொழில்நுட்பம் மிகவும் கவலைக்கிடமாகி உள்ள நிலையில்.தங்களுடன் லேப்டாப். மற்றும் எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களின் சிம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட மோடங்களை உடன் கொண்டு செல்லவும்.
4) இந்த மழையின் தொடற்சியாக அடுத்து பல வேகமாக பரவக்கூடிய நோய்கள் வரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து நோய் எதிர்ப்பு மருந்துகளை உடன் வைத்திருக்க வேண்டுகிறேன்.
5) தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில மிருகங்கள் இடைஞ்சல் செய்ய முற்படலாம். எனவே தயவு செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கண்கணிப்பு கேமராவை வாகனங்களில் பொருத்தி வைக்கவும், மேலும் தாங்கள் செல்லும் வழியை தங்களின் தளத்திலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர்வதை கூடுமானவரை தவிர்க்கவும்.
சிறந்த பணி. அன்பும் வாழ்த்துக்களும். மேலும் சிறக்கட்டும்
சிறப்பான முறையில் உதவிகள் நிறைவேற வேண்டுகிறேன்...
ji, if possible sms me, manoj and ravichandran mobile no. I would like to scout north chennai field survey tomorrow afternoon ( Tue. 8th ) if chennai places has not yet been finalised. already in touch with jayaraj. sorry to enquire these things in comment box. anbudan. sundar. g. chennai
Pakkaa.. Executing as planned, great job Mani Anna and nisaptham friends... simply amazing to see people coming together for good cause and working systematically. Have learned a lot from Nisaptham .. way to go...
God bless you and the team, and all the souls extending their hand to people in great distress...
Intha mazhaiyaal ilanthathai vida petrathu adhigamo ena thondrugirathu..
மணிகண்டன் உங்களது முயற்சிக்களுக்கும் செய்யும் உதவிகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் அதுமட்டுமல்ல நீங்கள் செய்யும் அனைத்திற்கும் சப்போர்ட் செய்யும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். சிலசமயங்களில் நாம் உதவி செய்ய முனையும் போது நம் குடும்பதினர் நமது நலன் கருதி முட்டுக்கட்டை போட்டுவிடுவார்கள் ஆனால் அப்படி எல்லாம் செய்யாமல் இருக்கும் உங்கள் குடும்பத்தினர் ரியலி கிரேட். & யூ டூ
Please avoid any gundas affixing stickers.. all your effort will be gone in vain
மேலும் எங்கு செல்வதாக இருந்தாலும் கால்களில் ரப்பர் ஷூக்களை 'தீயணைப்பு துறையில்' உள்ள மாதிரி.. அணிந்து செல்லவும் காரணம் கொட்டித்தள்ளிய மழையில் ஆணி, கண்ணாடி. உள்ளிட்ட பொருட்கள் வழியெங்கும் இருக்கும். நாம்தான் கவனத்துடன் இருக்க வேண்டும்.
உதவிக்கு யாரும் எட்டி பார்கவில்லையே என்ற கோபத்தில் உண்மையான அன்புடன் செல்லும் தங்களிடம் ஆவேசப்படக்கூடும்.. தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள்..
நோய் எதிர்பு சக்திகுறைந்த குழந்தைகள், ஊனமுற்றோர், வயதானவர்கள், பெண்கள். இவர்களையெல்லாம் தயவு செய்து மீண்டும் நிலமை சரியாகும் வரை வெளியேறி வேறு இடத்திற்க்கு செல்ல அறிவுறுத்தவும் கா'ரணம்' 'எளிதில் பரவக்கூடிய தொற்று நோய்கள் மற்றும் மேலும் ஒரு பெரு மழை வரும் அபாயம் நிணைக்கும்போதே வேதனையளிக்கிறது.
உதவிக்கு செல்லும் தெய்வங்களே உங்களையும் தற்காத்துகொள்ளுங்கள்.
Dear Manikandan,
You are doing wonderful job. God bless !!
Regards
Sasikumar
தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Many newspapers hinting that local rowdies/political porukkis are the disturbance for the volunteers, so you have to be careful when you distribute such a huge quantity. My suggestion you may use any influence so that you can do as per your plan. All the best.
√
இயற்கை தன் இயல்பை இழந்தாலும்
மணிதம் இன்னும் மரிக்கவில்லை
பாராட்டுக்கள்,வாழ்த்துகள், மணிகண்டன், You doing a Great Job
தயவு செய்து வீடு வீடாக மட்டும் கொடுக்கவும்
Mani sir. My special appreciation to each and everyone of them who worked for this. Have some cameras with you. and, use your influence if needed. Cause, These political cadres are dangerous. And, mr. anbe sivam is really great in his special guidance. Try to give them a written script to face problems at the time of distribution.
நன்றிகள் மணிகண்டன்.
Post a Comment