Dec 31, 2014

ஒரு அறிவிப்பு

‘மசால் தோசை 38 ரூபாய்’ புத்தகம் வேண்டும் என்று நிசப்தம் அறக்கட்டளைக்கு பணம் அனுப்பி வைத்திருக்கிறார்கள். அறக்கட்டளையின் கணக்கை புத்தக வியாபாரத்திற்காக பயன்படுத்திக் கொள்வதில் துளியும் விருப்பம் இல்லை. அது சரியான செயலும் இல்லை. இதுவரை பணம் அனுப்பி வைத்த நண்பர்களுக்கு புத்தகத்தை அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறேன். இனிமேல் தயவு செய்து புத்தகம் கேட்டு நிசப்தம் அறக்கட்டளையின் கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டாம். 

முன்பு எதற்காக அறக்கட்டளையின் கணக்கு விபரங்களைத் தந்திருந்தேன் என்றால் புத்தகத்தின் விலையை விடக் கூடுதலாகத் தரப்படும் பணத்தை கோவை ஞானி அவர்களுக்கான உதவியாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தில்தான். 

நிறையப் பேர் புத்தகத்திற்கான தொகையை மட்டும் அனுப்பியிருந்தார்கள். அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிச் செய்வது வெறும் விற்பனை சார்ந்த செயல் ஆகிவிடுமல்லவா? அறக்கட்டளையின் வழியாக எனக்கு மறைமுகமாக உதவி செய்து கொள்வதைப் போன்ற அர்த்தம் வந்துவிடும். அதனால்தான் வேண்டாம் என்கிறேன். 

தயவு செய்து இதனைத் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.

புத்தகத்தின் ஆன்லைன் விற்பனைக்கான இணைப்பை விரைவில் தருகிறேன். 

ஆதரவுக்கும் புரிதலுக்கும் மனப்பூர்வமான நன்றி.