Jun 10, 2014

நீ அவராக முயற்சிக்கிறாயா?

இன்று ஒரு நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். நண்பர் என்று எப்படிச் சொல்வது? போலியாக உருவாக்கப்பட்ட மின்னஞ்சல் ஐடி அது. யாரென்றே தெரியவில்லை. தனது மனதில் இருக்கும் அத்தனை வன்மங்களையும் கொட்டி மின்னஞ்சல் எழுதப்பட்டிருந்தது. வரிக்கு வரி அத்தனை ஆபாசம், அத்தனை வஞ்சகம். இத்தகைய மின்னஞ்சல்களை பெரும்பாலும் நிராகரித்துவிடுவேன். இன்று ராசிபலன் சரியில்லை. முழுமையாக் வாசித்துத் தொலைந்துவிட்டேன். நாள் முழுவதுக்குமான கசப்பினை அந்த மின்னஞ்சல் சுமந்து வந்திருந்தது.

இது போன்ற வசைகளை எதிர்கொள்வதற்குத்தான் புத்தனாகவும் காந்தியுமாக இருக்க வேண்டும். மறந்துவிட்டு அல்லது ஒதுக்கிவிட்டு போயிருக்கலாம். ஆனால் ஆசாபாசங்களுடன் கூடிய சாமானியர்களை அசைத்துப் பார்த்துவிடுகிறது.

எதனால் இப்படி பொங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை. ‘நீ அவராக முயற்சிக்கிறாயா?’ என்றெல்லாம் கேட்டிருந்தார். அவர் என்ற இடத்தில் யாரைக் குறிப்பிட்டிருப்பார் என்று யூகித்துக் கொள்ளுங்கள். இந்தக் கேள்விகளை எதிர்கொள்வதெல்லாம் பிரச்சினையில்லை. சமாளித்துவிடலாம்தான்.

இங்கு யாரும் யாருடைய இடத்தையும் பிடிக்க முடியாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். எழுத்தில் மட்டும் இல்லை- எந்தத் துறையிலுமேதான். எம்.ஜி.ஆர் இடத்தை ரஜினியும் ரஜினி இடத்தை விஜய்யும் என்னதான் தலைகீழாக நின்றாலும் பிடிக்க முடியாது. இந்திராவின் இடத்தை ராஜீவ் காந்தியோ, ராஜீவின் இடத்தை ராகுலும் என்னதான் கனவு கண்டாலும் தொட முடியாது. மூக்கால் தண்ணீர் குடித்தாலும் திருபாய் அம்பானியின் இடத்தை அனில் அம்பானியும், முகேஷ் அம்பானியும் அடைய முடியுமா என்ன? ஒருவேளை தாண்டிப் போகலாம். ஆனால் ஒருவர் உருவாக்கி வைத்த இடத்தை எந்தக் காலத்திலும் இன்னொரு மனிதனால் அடைய முடியாது. அதுதான் நிதர்சனம்.

அவரவர் திறமைக்கும், உழைப்புக்கும் ஏற்ப ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்கிறோம். அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்வதும், கோட்டைவிடுவதும் அவரவர் செயல்பாட்டைப் பொறுத்தது. எழுத்துத்துறையைப் பொறுத்தவரைக்கும் அடுத்தவர்களால் தூக்கிப் பிடிக்கவும் முடியாது; கீழே போட்டு தேய்க்கவும் முடியாது. இதைப் புரிந்து கொண்டால் பிரச்சினையே இல்லை. புரிந்து கொள்ளாததால்தான் இத்தனை வயிற்றெரிச்சலும், பொறாமையும், புறம் பேசுதலும், குழுவாதமும்.

சரி விடுங்கள்.

பெங்களூர் சாகித்ய அகாடெமிக்காரர்கள் இன்று ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். இவர்களிடம் நிறைய காசு இருக்கும் போலிருக்கிறது. அவ்வப்போது லட்சக்கணக்கில் செலவு செய்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இன்று தென்னக மொழிகளில் சிறுகதைகளின் போக்கு பற்றிய கருத்தரங்கு. இந்த முறை அழைப்பிதழ் அனுப்பியிருந்தார்கள். சாகித்ய அகாடமியில் இருந்து அழைப்பிதழ் வந்திருக்கிறது என்று வீட்டில் பந்தா காட்டிக் கொண்டேன். அழைப்பிதழைப் பார்த்தவுடனேயே கருத்தரங்குக்கு செல்வது என்று ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தேன். செவ்வாய்க்கிழமை- கட் அடித்துவிடலாம். கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் சிறுகதைகளை வாசித்து அந்தந்த மொழிகளில் சிறுகதைப் போக்கு பற்றிய கட்டுரைகளையும் வாசித்தார்கள். உருப்படியான நிகழ்வு. தமிழில் அழகிய பெரியவன் சிறுகதை வாசித்தார். 

மதிய உணவை முடித்துவிட்டு அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டேன். அரங்கில் இருபது பேர்கள் இருந்தார்கள். எல்லோரும் மூத்த குடிமக்கள். அவ்வப்போது இத்தகைய நிகழ்வுகளுக்குச் சென்று வந்தால்தான் உள்ளூருக்குள் என்ன நடக்கிறது என்று தெரியும். இனிமேல் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் சாகித்ய அகாடமி அலுவலகத்தில் இலக்கியக் கூட்டம் நடத்தவிருக்கிறார்கள். இந்த மாதம் 22 ஆம் தேதி முதல் கூட்டம். தென்னகக் கவிஞர்களின் கவிதை வாசிப்பு நிகழவிருக்கிறது. தமிழில் இருந்து எந்தக் கவிஞரை அழைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் முதல் வரிசையில் கர்ச்சீப் போட்டுவிட்டு வந்திருக்கிறேன். 

நிகழ்ச்சி முடிந்த பிறகு அழகிய பெரியவனோடு அதிகம் பேச முடியவில்லை. ஒண்ணேகால் நிமிடம் பேசிவிட்டு கிளம்பி வந்துவிட்டேன்.

என்னதான் நல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அந்தக் கடிதம்தான் நினைவில் நிழலாடிக் கொண்டிருந்தது. அடுத்தவர்களுக்கு உதவி வாங்கித் தருவதற்கு உனக்கு எவ்வளவு கமிஷன் என்று கேட்டிருந்தார். அந்தக் கேள்விதான் இப்பொழுது வரைக்கும் சங்கடமாக இருக்கிறது.

ஆண்டவன் புண்ணியத்தில் அடுத்தவர்களின் காசை எதிர்பார்க்க வேண்டிய நிலைமை இன்று வரைக்கும் இல்லை. பத்தாயிரம், இருபதாயிரத்துக்கெல்லாம் சுயத்தை இழக்கும் அற்பமாக நான் இல்லை. எளிய மனிதர்களுக்குச் செல்லும் இந்த உதவிகளில் ஒரு ரூபாய்க்கு உரிமை கோரினாலும் கூட அதன் பாவம் என் மகனுக்கும் தொடரும் என்பதை மனப்பூர்வமாக நம்புகிறேன். 

வெறும் எழுத்தோடு நின்றுவிடாமல் தகுதியானவர்களின் பாதையில் கிடக்கும் முட்களை பொறுக்கி வீசும் சாதாரண வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன். அது பொறுக்கவில்லை இவர்களுக்கு. இவற்றையெல்லாம் மனசாட்சிக்குத் துளி பங்கமில்லாமல் செய்து கொண்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். அப்படியிருந்தும் அடிக்கிறார்கள். இந்தக் மாதிரியான கேள்வியெல்லாம் வரக் கூடாது என்பதற்காகத்தான் உதவி தேவைப்படுபவர்களின் கணக்குக்கு நேரடியாக பணத்தை அனுப்பி வைத்துவிடச் சொல்கிறேன். 

இவர்களைப் போன்றவர்களுக்கு இதையெல்லாம் எப்படி நிரூபிப்பது? வாய்ப்பே இல்லை. இது வெறும் நம்பிக்கை சார்ந்த விஷயம்.  எளிமையான நம்பிக்கை இது. நம்புகிறவர்கள் உதவுகிறார்கள். நம்பாதவர்களிடம் என்ன பதிலைச் சொல்வது? கேள்வி கேட்டால் பதிலைச் சொல்லலாம். ஆனால் கைகளில் கூரிய ஊசியை வைத்துக் கொண்டு சுற்றினால்? வாய்ப்பு கிடைக்கும் போது கருவிழியில் செருகி எடுத்து ரத்தத்தை ருசி பார்க்கிறார்கள். இன்று என்னுடைய ரத்தத்தை ருசி பார்த்திருக்கிறார். அவ்வளவுதான்.

42 எதிர் சப்தங்கள்:

Unknown said...

//இவர்களைப் போன்றவர்களுக்கு இதையெல்லாம் எப்படி நிரூபிப்பது?// இவர்களுக்கு நீங்கள் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை மணி. உங்களை நாங்கள் நம்புகிறோம்; எங்களை நம்பி இதைத் தொடருங்கள்.

Unknown said...

மணி மனம் தளர வேண்டாம். உங்க மனசாட்சிக்கு தெரியும் உங்களைப் பற்றி. நல்ல நண்பர்கள் நாங்களிருக்கிறோம். வேறென்ன வேண்டும். ரணம் தான். ஆனால வெளியே வந்து தான் ஆகவேண்டும். selva.k.ramana

natarajan said...

இப்படி ஒவ்வொருவருக்காக பதில் சொல்லி அதை புத்தகமாக போடும் ஐடியா எதாவது இருக்கிறதா தோழர்?

Muthu said...

இதெல்லாம் அதீத தாழ்வு மனப்பான்மையினாலும் குற்ற உணர்ச்சியினாலும் நொதித்துக்கொண்டிருக்கும் அற்ப ஜந்துக்கள். “ச்சூ ச்சூ” என்று விரட்டிவிட்டு போய்க்கொண்டே இருங்கள் மணி.

Shankari said...

Just ignore and keep doing the good things!

phantom363 said...

not to worry. wish you had a notion about what it was, so that you could have avoided it. evil is all around, and is best avoided wherever possible. be strong. God Bless... rajamani

கார்த்திக் சரவணன் said...

இந்த மாதிரி அறிவிலிகளின் கடிதத்தை மனதில் கொள்ளாமல் உங்களது நற்பணிகளைத் தொடருங்கள்... நல்லதே நடக்கும்...

அரவிந்தன் said...

அன்பின் மணி,

பழுத்த மரம்தான் கல்லடி படும்

HariV is not a aruvujeevi said...

http://www.youtube.com/watch?v=zHJdgYyvGWA

Bala said...

Continue your good work. Ignore such criticism.

Packirisamy N said...

பழுத்த மரம் கல்லடிபடுவது இயல்பு. அவர்களுடைய கடிதங்களை வெகுமதியாக எண்ணிக்கொள்ளுங்கள். Jealousy is the best compliment.

govinthan said...

well said

govinthan said...

பெரிய ஆளாயிட்டீங்கண்ணா அதுன்காட்டிதான் நாய்கள் குரைக்குதுங்க நல்ல வேலை செய்துட்டு இருக்கீங்க. தூக்கி பொடக்காலிலே
போட்டுட்டு போய்கிட்டே இருங்க.கொஞ்சம் சாக்கிரதியா இருங்க சி எம் ஆ கூட ஆக்கி உட்டுருவனுக இந்த பொச்செரிச்சல் புடுங்கீக.Mani you are making a royal march. Keep going This dogs will trail off with their tails between their legs. Forget this scrap. Move along You are doing the maximum a common man can do with his limited resources hats off to you

கரந்தை ஜெயக்குமார் said...

எங்கேயும், எப்பொழுதும் இப்படிப்பட்டவர்கள் பலர் இருக்கத்தான் செய்வார்கள்
இவர்களையும் கடந்துதான் சென்றாக வேண்டும்

இராய செல்லப்பா said...

பொது வாழ்வில் இதெல்லாம் சகஜம். தோலைச் சற்றே தடிப்பாக்கிக் கொள்ளுங்கள்.

Unknown said...

Dear anna ethukkum feel pannathinga.. neenga pandra help pannitey irunga... athukkana rewards kandippa ungalukku kedaikkum.. People who will talk let them talk... Enga support eppavum ungalukku irukkum.. May God bless for our activities.. Dont worry

balutanjore said...

dear mani
saddened with their attitude
JUST IGNORE and keep going
we know who are doing what
relax . my best wishes

கோவை செந்தில் said...

உடுங்க சார், இவிங்க எப்பொழுதுமெ இப்படித்தான், நல்லது நடந்தா பொறுக்காது, பொறாமை.......

மணிமகன் said...

Manikandan,

Dont bother about these guys. just ignore and keep going...

Unknown said...

இது உங்களை விட வயதில் மூத்த, எழுத்துலக சீனியர்களில் கிடைத்த அங்கீகாரத்தை வீணடித்த ஏதோ ஒரு ஊரறிந்த எழுத்தாளரின் செயலாக படுகிறது. அவரது ஆற்றாமை வன்மம் முகநூளில் சில நாட்களுக்கு முன் பதிய பட்டது. இத்தகைய மனிதர்களுக்கு விளக்கம் அளித்து நேரத்தை வீணடிக்காமல் உங்கள் பாதையில் சென்று கொண்டிருங்கள் தோழர் !!

தக்குடு said...

தென்றல் வீசும் அழகான சோலையில் நடைபயிலும் போது வழியில் தெரியாமல் சில சமயங்களில் அசிங்கத்தை மிதித்துவிடும் போது அசிங்கத்திற்காக முகாரி வாசிக்காமல் கால்களை சுத்தம் செய்து கொண்டு நம் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும்! வாழ்த்துக்கள்!

Kathir said...

Dear Mani, It is easy to criticize anything under the sun, and few are mastered in that art ( after all that's the best they can do), Ignore such critics who doesn't even have the guts to reveal themselves. IMO, You may have to prove yourself to someone who trusts you / helped someone through you, and not to all trespassers whom you happen to pass by. Please continue your good work, It is easy to throw stone on someone, but hard is to identify and removing obstacles on others path, and my humble request is, you should ignore these creatures who are good at throwing stones, and continue your good work. All the best!!

Uma said...

தகுதியானவர்களின் பாதையில் கிடக்கும் முட்களை பொறுக்கி வீசும் உங்களுக்கு விழியில் பாய்ச்சப்பட்ட ஊசியைப் பிடுங்கி வீசும்,வலியைத் தாங்கும் வல்லமையையும் கடவுள் அருள்வார்.

அமுதா கிருஷ்ணா said...

அந்த கடிதத்தை படிக்காமலேயே கோவம் கோவமா வருது.உங்கள் மனது புரிகிறது. எதிலேயும் எப்படி தான் சந்தேகப்படுவார்களோ. வாழ்க்கையில் யாரோ அவரை கடுமையாக ஏமாற்றி இருப்பார்களோ???

Paramasivam said...

Ignore and March on.

சிவபார்கவி said...

Leave it, u can concentrate more on help needed person... a good thinks started from u.
wishes...

sivparkavi

சேக்காளி said...

//சி எம் ஆ கூட ஆக்கி உட்டுருவானுக//
வருங்கால முதல்வர் அண்ணன் மணி வாழ்க வாழ்க.
கண்ணை மூடிக்கொண்டு ஒரு நொடி முதல்வராக நினைத்து பாருங்கள். இப்போது ராசியை பார்க்காமல் பலன்களை மட்டும் வாசியுங்கள். மனதிற்கு இனிப்பான பலனை உங்கள் ராசியாக நினைத்துக்கொள்ளுங்கள்.

சேக்காளி said...

சேக்காளி said...

அப்புறம் அந்த ஊசிய வச்சு ஒரு தையல்.அதுக்கு ஒரு பதிவு.அதுக்கு ஒரு ஊசி.அப்படின்னு ஒரு ஊசி யாவாரி ஆயிரலாம்.அம்புட்டு ஊசி அவரு தருவாரு.
இவ்ளோ சிரிப்பு காட்டுன பெறவும் உம்முனு இருந்தா எப்பிடி மணி.

சேக்காளி said...

அவுரு சொன்ன அவரு "சுஜாதா" வா?

Unknown said...

வறுமையைப் பற்றி கவலைப் படலாம். கல்வித் தரத்தைப் பற்றிக் கவலைப்படலாம். ஆனால் இது போன்ற ஆட்களின் அடிமட்டமான எண்ணத்தையோ, அவர்களின் கருத்துகளையோ எண்ணி வருந்த வேண்டியது இல்லை. நீங்கள் தொடருங்கள்.

sivakumarcoimbatore said...

mani sir, ஒருவர் உருவாக்கி வைத்த இடத்தை எந்தக் காலத்திலும் இன்னொரு மனிதனால் அடைய முடியாது. அதுதான் நிதர்சனம்.இது போன்ற ஆட்களின் அடிமட்டமான எண்ணத்தையோ, அவர்களின் கருத்துகளையோ எண்ணி வருந்த வேண்டியது இல்லை.

ராமுடு said...

Dear Mr.Mani, Please neglect these type of pathetic emails. He / She will win, if you try to stop your activity for good cause. You will win, only if you continue. Don't stop it over here and post more & more. Just inform him /her that you will get commission based on sales.. Thats it. You have more self-respect. Don't loose it by paying attention to craps..

bullsstreet said...

விட்டுத் தள்ளுங்கள் மணிகண்டன்.
எனக்குக் கூட இன்றைக்கு 'இந்தியன்' என்ற போலியான ப்ளாக்கர் ஐடியூடன் ஒருவன் எழுதியிருந்தான்.நீ ஏன் உன் புத்தகங்களை காசுக்கு விற்கிறாய்.உன்னிடம்தான் நிறைய காசு இருக்கு.எல்லா புத்தகங்களையூம் பிடிஎஃப்பாக்கி இலவசமாக நெட்டில் போட்டால் என்ன என்று கேட்கிறான்.புத்தகம் எழுதுவதும் புத்தகம் வெளியிடுவதும் ஒரு பிசினஸ் என்பதை புரிந்து கொள்ளாத இவர்களை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதே நல்லது.விட்டுத் தள்ளுங்கள்.குட்நைட்.
-டி.ஏ.விஜய்
http://bullsstreetdotcom.blogspot.in

Krishna said...

கடந்து வாருங்கள் நண்பரே... இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டியிருக்கிறது....

துளசி கோபால் said...

:-(((((((((((((((((

நெல்லைத் தமிழன் said...

இதுவும் கடந்துபோகும். நெட்ல வரும் விமரிசனங்களையோ அல்லது நம்முடைய கடும் எண்ணங்களைப் பற்றியோ யாரும் கவலைப் பட்டுக்கொண்டிருந்தால் இந்தியாவில் அரசியல்வாதிகள் இருக்கவே முடியாது. எந்த ஒருவரைப் பற்றியும் அவரின் செயல்களைப் பற்றியும் விமரிசனம், எதிர்ப்பு இருந்துகொண்டே இருக்கும். நம் வழியில் போய்க்கொண்டே இருக்கவேண்டும். நம் செயல்கள் சரியென்றால், பெரும்பான்மை நம்மை ஆதரிக்கும். அவ்வளவுதான். எதிர் விமரிசனம், நம்மை நாமே இன்னொருமுறை தெளிவாக்கிக்கொள்வதற்கு உபயோகப்படும் (நாம் சரியானதுதான் செய்கிறோமா? மாறுதல்கள் தேவையா? என்று எண்ணி நம் பாதையைச் சரிசெய்துகொள்ள உதவும்).

மற்றபடி, கடுமையான நேர்மையில்லாத விமரிசனம் என்றாலே, அதனை முழுவதுமாகப் படித்து நம் நேரத்தையோ அல்லது moodஐயோ கெடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

இதுக்குப் போய் அலட்டிக்கலாமா?

Unknown said...

dont read the mails like this .. delete it in begginning itself.. yenake konjam kastama iruku.. unna pathi kekavendiyadhe illa.. but still dont loose heart.. cheer up da... continue ur good work...v r with u :):):)

Unknown said...

Dont take these mails to your heart mani... freeya vidu:):) article padicha yenake konjam kadupa dhan iruku..:(:(.. chher up..continue ur good work da:):) v r with u:):):):):):)

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

உங்களை நம்பாதவர்கள் புரிந்துகொள்வார்கள் ஆனால் நம்பியவர்கள் சந்தேகப்படுவதுதான் ஆபத்து .உங்களை நம்ப நாங்கள் இருக்கிறோம் .உங்கள் வழியில் போய் கொண்டே இருங்களேன் .

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு

visit: http://ypvn.0hna.com/

Unknown said...

Vittu thallunga sir... Ivangallam oru ala...