May 7, 2012

பாதை தொலைத்த நாய்கள்




கிராமத்தை
நெடுக்காக பிளந்து செல்லும்
நெடுஞ்சாலையை
கடக்க காத்திருக்கும்
அவள்
நேற்றைய மழையில் துளிர்த்த
பசுந்தளிர் ஒன்றைக் கிள்ளி
உள்ளங்கையில் வைத்திருக்கிறாள்
வியர்வையில் கசங்கிக் கொண்டிருக்கும் அது
நசுங்கிக் கிடந்த நாயொன்றை நினைவுபடுத்துகிறது
பதட்டத்தில் தளிரை வீசியெறிந்தவள்
நெடுஞ்சாலைகளில் மரிக்கும் நாய்களுக்காக
ஒரு கணம் மெளனிக்கிறாள்
மணிக்கு நூற்றியிருபது கிலோமீட்டர் வேகத்தில்
அவளைக் கலைக்கிறது
கறுப்பு நிற ஸ்கார்ப்பியோ.


படம்: Michel Keck

3 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

நல்ல உவமான உவமேயம். நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கவிதை ! வாழ்த்துக்கள் !

Kumaran said...

அருமையான கவிதை..பகிர்வுக்கு ரொம்ப நன்றிங்க..

Mysterious Island - திரைப்பார்வை