
பெங்களூரு நகரில் நித்யானந்தனுக்கு மெழுகில் சிலை செய்து நான்கு கிலோ மீட்டருக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றிருக்கிறார்கள். லாஸ் ஏஞ்சலீஸிலிருந்து ஒரு பக்த சிகாமணி இந்தச் சிலை செய்யும் பொறுப்பை ஏற்றிருக்கிறாராம். பக்த சிகாமணி செய்ததா அல்லது நித்யானந்தனின் ஆசிரமமே செய்ததா என்பதைவிட பெங்களூரு போன்ற மாநகரில் இவனுடைய சிலையின் ஊர்வலத்தை நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு எடுத்துச் செல்லும் போது எதிர்ப்பு தெரிவிக்க எந்த அமைப்போ அல்லது தனிமனிதனோ இல்லை என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
ஒளிந்து கொண்டிருந்தவனை இமாச்சலப் பிரதேசம் சென்று கைது செய்த காவல்துறை இதை எப்படிப் பொறுத்துக் கொண்டது? பக்கம் பக்கமாக இவனைப் பற்றி எழுதிக் கிழித்த ஊடங்கள் என்ன செய்து கொண்டிருந்தன
என்று என் அரை மண்டையில் தோன்றுகிறது.
நித்யானந்தன் தவறு செய்வதாகச் சொல்பவர்களில் பெரும்பாலானவர்கள் சொல்லும் காரணம் அவன் ஆன்மிகவாதி என்ற போர்வையில் ஸ்தீரிலோலனாக இருந்திருக்கிறான் என்பது. இன்றைக்கு ஆன்மிகவாதி என்றாலே அவன் அயோக்கியத்தனம் செய்பவன் என்று உறுதியாக நம்புவதால் மேற்குறிப்பிட்ட காரணத்திற்காக அவன் மீது கோபம் எதுவுமில்லை.
ஆனால் பணக்காரர்களால், ஊடகங்களால், எழுத்தாளனால், பிரபலங்களால் கடவுளுக்கு இணையானவனாக கட்டமைக்கப்பட்ட ஒருவனது முகத்திரை கிழிந்து தொங்குவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.
அடுத்த சாமியார் ஒருவனை தூக்கிப் பிடிக்க ஓரிரு வருடங்களுக்காவது தயங்குவார்கள் என்ற நம்பிக்கைதான் மகிழ்ச்சிக்கு காரணம். ஆனால் அந்த நம்பிக்கை தவிடு பொடியாகிறது. மூன்று மாதங்களுக்கு முன்னால் நாய்கள் கூட அவனது முகத்தில் சிறுநீர் கழித்துச் சென்ற காட்சி மறைவதற்குள்ளாக அவன் மீண்டும் கடவுள் வேடம் ஏற்பதைப் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.
மூன்று மாதங்களுக்கு முன்பு கயமைத்தனத்தில் சிக்கிக் கொண்டே அதே பொறுக்கியை அவனது ஆட்களே தாங்கிப் பிடிக்கிறார்கள். அவனது முழு உருவ மெழுகுச் சிலையை நான்கு கிலோ மீட்டருக்கு ஊருவலமாக எடுத்து வருகிறார்கள்.
ஒளிந்து கொண்டிருந்தவனை இமாச்சலப் பிரதேசம் சென்று கைது செய்த காவல்துறை இதை எப்படிப் பொறுத்துக் கொண்டது? பக்கம் பக்கமாக இவனைப் பற்றி எழுதிக் கிழித்த ஊடங்கள் என்ன செய்து கொண்டிருந்தன
என்று என் அரை மண்டையில் தோன்றுகிறது.
நித்யானந்தன் தவறு செய்வதாகச் சொல்பவர்களில் பெரும்பாலானவர்கள் சொல்லும் காரணம் அவன் ஆன்மிகவாதி என்ற போர்வையில் ஸ்தீரிலோலனாக இருந்திருக்கிறான் என்பது. இன்றைக்கு ஆன்மிகவாதி என்றாலே அவன் அயோக்கியத்தனம் செய்பவன் என்று உறுதியாக நம்புவதால் மேற்குறிப்பிட்ட காரணத்திற்காக அவன் மீது கோபம் எதுவுமில்லை.
ஆனால் பணக்காரர்களால், ஊடகங்களால், எழுத்தாளனால், பிரபலங்களால் கடவுளுக்கு இணையானவனாக கட்டமைக்கப்பட்ட ஒருவனது முகத்திரை கிழிந்து தொங்குவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.
அடுத்த சாமியார் ஒருவனை தூக்கிப் பிடிக்க ஓரிரு வருடங்களுக்காவது தயங்குவார்கள் என்ற நம்பிக்கைதான் மகிழ்ச்சிக்கு காரணம். ஆனால் அந்த நம்பிக்கை தவிடு பொடியாகிறது. மூன்று மாதங்களுக்கு முன்னால் நாய்கள் கூட அவனது முகத்தில் சிறுநீர் கழித்துச் சென்ற காட்சி மறைவதற்குள்ளாக அவன் மீண்டும் கடவுள் வேடம் ஏற்பதைப் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.
மூன்று மாதங்களுக்கு முன்பு கயமைத்தனத்தில் சிக்கிக் கொண்டே அதே பொறுக்கியை அவனது ஆட்களே தாங்கிப் பிடிக்கிறார்கள். அவனது முழு உருவ மெழுகுச் சிலையை நான்கு கிலோ மீட்டருக்கு ஊருவலமாக எடுத்து வருகிறார்கள்.
முதலில் நான் உத்தமன் என்றான், பின்னர் நடிகையை நல்ல பக்தை என்றான். இன்று அவனது ஆசிரம நிர்வாகி ஒருவர் நடிகையை ஆசிரமத்திற்குள் அனுமதிப்போம் என்கிறார்.
காமத்தின் அடிப்படையில் இச்சமூகம் துரோகியாக, கயவனாக, காமுகனாக உருவகித்த ஒருவன், எந்தவிதக் கூச்சமும் இல்லாமல் அதே பல்லிளிப்புடன் மூன்றே மாதங்களில் காட்சி தருகிறான். குரு பெளர்ணமி நடத்துகிறேன் அனுமதி இலவசம் கலந்து கொள்ளுங்கள் என்று அறைகூவல் விடுக்கிறான்.
காமுகன் என்றும் ஆன்மிக துரோகி என்றும் நிரூபிக்கப்பட்ட பிம்பங்களிலிருந்து மிக வேகமாக தன்னை விடுவித்துக் கொள்கிறான். இனி இந்தச் சமூகம் இவனைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்களை மறந்து போகும். இவனது காலடியில் பணத்தைக் கொட்டி சேவகம் செய்வதற்காக ஒரு கூட்டம் தயாராகிவிடும்.
அத்தனை கூத்துகளையும் இந்தச் சமூகம் அமைதியாக ஏற்றுக் கொள்வதைப் பார்ப்பதற்கு வியப்பாக இருக்கிறது.
சாதி மாறிய திருமணங்கள் செய்து கொண்டவர்களை கொல்பவர்கள் நிறைந்த சமூகம்தான் குரு பவுர்ணமி கொண்டாடுபவனை பார்த்துக் கொண்டிருக்கிறது. இரவுக் களியாட்டங்களில் கலந்து கொண்ட யுவதிகளை அடித்துத் துரத்திய கலாச்சாரக் காவலர்கள்தான் மெழுகுச் சிலை ஊர்வலத்திற்கு ஓ போடுகிறார்கள்.
திருமணத்திலும், இரவுக் களியாட்டத்திலும், அடுத்தவன் மனைவியுடனான சல்லாபத்திலும் காமம்தான் அடிப்படையாக இருக்கிறது. ஆனால் ஒன்றை முரட்டுத்தனமாக எதிர்க்கும் சமூகம் மற்றதை அமைதியாக ஏற்றுக் கொள்கிறது.
காமத்தை உள்ளுக்குள் ரசித்து அனுபவிக்கும் தன்மைதான் இந்தவிதமான அத்தனை செய்திகளையும் பரபரப்பாக்குகிறது. காமத்தின் பரபரப்பு புணர்ச்சியில் அடங்குவதைப் போலவே இந்தக் காமம் சார்ந்த செய்திகளின் பரபரப்பும் ஓய்ந்துவிடுகின்றன.
இனி நித்யானந்தன் வழக்கம்போலவே ஆன்மிகச் சுடரொளியுடன் நகர்வலம் வருவான். உள்ளுக்குள் பொறுமிக் கொண்டு வேடிக்கை பார்ப்போம். நமக்குள் எத்தனை சிக்கல்கள்?
காமத்தின் அடிப்படையில் இச்சமூகம் துரோகியாக, கயவனாக, காமுகனாக உருவகித்த ஒருவன், எந்தவிதக் கூச்சமும் இல்லாமல் அதே பல்லிளிப்புடன் மூன்றே மாதங்களில் காட்சி தருகிறான். குரு பெளர்ணமி நடத்துகிறேன் அனுமதி இலவசம் கலந்து கொள்ளுங்கள் என்று அறைகூவல் விடுக்கிறான்.
காமுகன் என்றும் ஆன்மிக துரோகி என்றும் நிரூபிக்கப்பட்ட பிம்பங்களிலிருந்து மிக வேகமாக தன்னை விடுவித்துக் கொள்கிறான். இனி இந்தச் சமூகம் இவனைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்களை மறந்து போகும். இவனது காலடியில் பணத்தைக் கொட்டி சேவகம் செய்வதற்காக ஒரு கூட்டம் தயாராகிவிடும்.
அத்தனை கூத்துகளையும் இந்தச் சமூகம் அமைதியாக ஏற்றுக் கொள்வதைப் பார்ப்பதற்கு வியப்பாக இருக்கிறது.
சாதி மாறிய திருமணங்கள் செய்து கொண்டவர்களை கொல்பவர்கள் நிறைந்த சமூகம்தான் குரு பவுர்ணமி கொண்டாடுபவனை பார்த்துக் கொண்டிருக்கிறது. இரவுக் களியாட்டங்களில் கலந்து கொண்ட யுவதிகளை அடித்துத் துரத்திய கலாச்சாரக் காவலர்கள்தான் மெழுகுச் சிலை ஊர்வலத்திற்கு ஓ போடுகிறார்கள்.
திருமணத்திலும், இரவுக் களியாட்டத்திலும், அடுத்தவன் மனைவியுடனான சல்லாபத்திலும் காமம்தான் அடிப்படையாக இருக்கிறது. ஆனால் ஒன்றை முரட்டுத்தனமாக எதிர்க்கும் சமூகம் மற்றதை அமைதியாக ஏற்றுக் கொள்கிறது.
காமத்தை உள்ளுக்குள் ரசித்து அனுபவிக்கும் தன்மைதான் இந்தவிதமான அத்தனை செய்திகளையும் பரபரப்பாக்குகிறது. காமத்தின் பரபரப்பு புணர்ச்சியில் அடங்குவதைப் போலவே இந்தக் காமம் சார்ந்த செய்திகளின் பரபரப்பும் ஓய்ந்துவிடுகின்றன.
இனி நித்யானந்தன் வழக்கம்போலவே ஆன்மிகச் சுடரொளியுடன் நகர்வலம் வருவான். உள்ளுக்குள் பொறுமிக் கொண்டு வேடிக்கை பார்ப்போம். நமக்குள் எத்தனை சிக்கல்கள்?