Friday, June 25 By: வா.மணிகண்டன்

பனியில் சிதறிய காட்சிகள்


அதிகாலை
வெண்ணிரவில்
டயர் ஓட்டிச் செல்கிறான்
ஒரு சிறுவன்

இடிந்த சுவரொன்று
தடுத்திருக்கும்
நகரச் சுடுக்காட்டின்
பிணமேட்டு கதகதப்பில்
குறுகிக் கிடக்ககிறது
செந்நாய்

இருள்
கிழித்துச் செல்லும்
லாரியின்
சக்கரத்தில் விழ
எத்தனிக்கிறான்
தற்கொலை
முடிவெடுத்தவன்

வேலிகள் பிடுங்கப்பட்ட
மறைவற்ற
சாலையில் மறைகிறாள்
இந்தக் கரும்பெண்

வெண்புகை வெளிவர
டீ குடிக்கும்
எனக்கான
இன்றைய துக்கம்
பிச்சைக்காரியின்
கால்நனைக்கும்
சிறுநீரால்
ஆசிர்வதிக்கப்படுகிறது.