May 28, 2009

ப்ரனீதா வேறு ஊருக்குச் செல்கிறாள்


ம‌ழை பெய்து
தெளிந்திருந்த‌ வான‌த்தில்
மூன்று ப‌ற‌வைக‌ள்
ப‌ற‌ந்து சென்று கொண்டிருந்தன.

ப்ர‌னீதா
வேறு ஊருக்குச் செல்வ‌தாக‌ச் சொன்னாள்.
கார‌ண‌ம் எதுவும் சொல்ல‌வில்லை.

புன்ன‌கை
க‌ண்ணீர்
துக்க‌ம்
எதுவுமில்லாமல்
மெள‌ன‌மாயிருந்தேன்.

ந‌னைந்திருந்த‌ செடியில்
இலைக‌ளை ப‌றித்துக் கொண்டிருந்தவள்-
நேர‌மாகிவிட்ட‌து
என்று
ந‌க‌ர‌த் துவ‌ங்கினாள்.

மூன்று ப‌ற‌வைக‌ள்
இருந்த‌ இட‌த்தில்
மேக‌த்திட்டு
வ‌ந்திருந்த‌து.