கவிஞர் அப்பாஸ் நேற்று( வெள்ளிக்கிழமை, 20 மார்ச்,2009)மரணம் அடைந்ததாக குறுஞ்செய்தியை தாராகணேசனும், மின்னஞ்சலை நரனும் அனுப்பி இருந்தனர்.
முதலில் இறந்தவன்,ஆறாவது பகல்,வரைபடம் மீறி , வயலட் நிற பூமி ஆகிய கவிதை தொகுப்புகள் வந்திருக்கின்றன.(வேறு தொகுப்புகள் ஏதேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை).
எனக்குத் தெரிந்த வரையிலும் வயலட் நிற பூமி மிகப் பரவலாக பேசப்பட்ட தொகுதி.
வயலட் நிற பூமி தொகுப்பிலிருந்து எனக்கு பிடித்தமான கவிதை இது. இந்தக் கவிதை மென்மையான காதலை சத்தமில்லாமல் சொல்கிறது.
நாம் சந்தித்துக் கொண்ட வேளை
நடுக்கம் உன்னைப் பற்றிக் கொள்ள
தெரிந்தும் தெரியாதது போல் நீ
அலுவலகம் பற்றி. தாமதமாய் வரும்
பஸ் குறித்து
நாம் பேசிக் கொண்ட வேளை
நீண்டு அழைக்கும்
உன் விரல் பற்ற நினைத்து
பற்றாமல் நானும்
பேச்சு நின்று தடைபட்ட கணத்தில்
கண்களில் வழியும் ஜூவாலையில்
கருகி விலகும் மனதுடன் நீயும்
வரும் பகல் அறியாது
பிரிந்து விலகினோம்.
*இக்கவிதையின் ஆழம் புரிந்து கொள்ள எஸ்.எம்.எஸ், Chat என்று எதிர்பாலினரிடம் என்ன வேண்டுமானாலும் பேச முடியும் என்ற சுதந்திர உலகத்தில் இருந்து வெளி வருகிறேன்.
2 எதிர் சப்தங்கள்:
Mail from writer Devendhira Poopathi:
கவிஞர் அப்பாஸ் அவர்கள் நேற்று, 20.03.09, வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் கோவில் பட்டியில் அகால மரணமானார். திடீரென ஏற்பட்ட மூளை நரம்பு வெடிப்பினால் உள் இரத்தப் பெருக்குக் காரணமாக இம் மரணம் ஏற்பட்டிருகின்றது. ஏற்கனவே உயர் இரத்த அழுத்தத்தினால் இவர் அவதியுற்றிருந்தார். கவிஞர் அப்பாஸ் அவர்களது இறுதிக் கிரிகைகள் யாவும் இன்று சனிக்கிழமை, 21.03.09 அன்று 10 மணிக்கு நடைபெறுகின்றது என்று அவரது தம்பி வெங்கடேஸ் அறிவிக்கின்றார். இவரது கவிதைத் தொகுப்புக்களில், கடந்த வருடம் யூலை மாதம் உயிர் எழுத்து வெளியீடாக வெளிக்கொணரப்பட்ட இறுதித் தொகுப்பின் பெயர் ”முதலில் இறந்தவன்”. மேலும் „வரைபடம் மீறி“, „வயலட் நிற பூமி“, „ஆறாவது பகல்“ (அகம் வெளியீடு) ஆகிய கவிதை நூல்கள் வெளிவந்திருக்கின்றன. பிரமிளின் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர் கவிஞர் அப்பாஸ்.
கவிஞர் அப்பாஸ் மறைவு குறித்த செய்தியை ஏற்கனவே தமிழ்ச்செல்வன், அழகிய சிங்கர் ப்ளாக் மூலமாக அறிந்தேன்.
அவருக்கு என் அஞ்சலிகளும்.
..................
நேற்று இந்தியாவுக்கு விடுமுறைக்குச் சென்றுவந்த நண்பர் ஒருவர் மூலம் விகடன் வாசிக்ககிடைத்தது.
அதிலிருந்த உங்கள் சிறுகதை சாவும் ஒரு கலை வாசித்தேன்.
கதையின் முடிவு ஒரு கவிதை போல இருந்தது. மிகவும் ரசித்தேன்.
வாழ்த்துககள் !
Post a Comment