
மகாராஷ்டிர அரசுதான் தற்போதைய தண்டல்காரன். ஐபிஎல் நடத்தும் கிரிகெட் போட்டிகளில் 'சீர்லீடர்ஸ்' எனப்படும் நடனக்குழுவிற்கு மும்பையில் தடை செய்யப் போகிறார்கள். மாநில உள்துறை இணையமைச்சருக்கு இந்தப் பெண்களின் 'பெருத்த மார்புகளும், சுழலும் இடுப்புகளும்' பெரும் தொந்தரவு செய்கிறதாம்.
நம் கலாச்சாரம் ஐந்தாயிரம் ஆண்டுகள் பாரம்பரிம் கொண்டது என்னும் வெற்று புளுகுமூட்டையைச் சுமந்து திரியும் இவர்கள்தான் உண்மையில் குப்பைகள். கலாச்சாரம் என்று இன்று நாம் கட்டியழும் எதுவுமே அடிப்படையான உண்மையைக் கொண்டவையில்லை. இவை இடைச் செருகல்கள். தங்களின் வசதிகேற்ப தங்களின் ஆதிக்கத் தன்மையை நிலைநிறுத்திக் கொள்ள அவ்வபொழுது சில குழுக்களால் வரையறுக்கப்பட்டவை.
தனக்கான விருப்பினை நிறைவேற்றிக் கொள்ள தனிமனிதனுக்கு எந்த சுதந்திரமுமில்லாத இந்தச் சமூகத்தில் எல்லாவிதமான செயல்பாடுகளிலும் தடைகள் இருக்கின்றன. தடைகளை மீறுபவர்கள் சமூகத்தின் குற்றவாளிகளாக கூண்டிலேற்றப்படுவார்கள்.
மனிதமனதின் ஆசைகள் வெறும் புறக்கட்டுப்பாடுகளால் கட்டுப்படுத்தக் கூடியவை இல்லை. அவை மதிப்பீடுகளால்(வேல்யூஸ்) மனதினுள் உருவாக்கப்படும் மாற்றங்களின் மூலம் கட்டுப்படுத்தக் கூடியவை. ஆனால் நாம் கலாச்சாரம் என்று பேசித் திரிபவைகள் எதுவும் மதிப்பீடுகளைக் கொண்டவை இல்லை. வெறும் தடைகள். மற்றவர்களுக்குத் தெரியாமல் இங்கு மனிதன் செய்யும் தவறுகள் அனைத்திற்குமான அடிப்படைத் தூண்டல்கள் நம் போலித்தனங்கள்தான். (இவர்களின் பாஷையில் 'கலாச்சாரம்').
சரி மகாராஷ்டிராவிற்குச் செல்லலாம். பெண்களை போகப்பொருளாக மட்டுமே காட்சிப்படுத்தும் எத்தனையோ திரைக்காட்சிகளும், விளம்பரங்களும் வந்து கொண்டு இருக்கின்றன. ஒருவன் அணிந்திருக்கும் உள்ளாடையைப் பார்த்தும், ஒருவனின் வாசனைத் திரவியத்திலும் தூண்டப்பட்டு காமத்தில் திளைக்கும் பெண்கள் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான தடவைகள் வரவேற்பறை வரைக்கும் வந்து செல்கிறார்கள். இவர்களின் கலாச்சாரத்தை இந்த விளம்பரங்கள் எதுவும் செய்யாமலிருக்கின்றன.
இவர்களின் கூறுகள் எல்லாவற்றிலும் ஆணாதிக்கம்தான் தொக்கி நிற்கின்றன.
இதே அமைச்சர் பெண்ணின் உடல் இந்த நடனங்களில் தவறுதலாக வணிகமயமாக்கப்படுகிறது என்று சொல்லியிருந்தால் ஒரு சலாம் அடித்திருக்கலாம். குடும்பத்தோடு பார்க்க முடியவில்லை என்றிருக்கிறார். (இந்த இடத்தில் உங்களுக்கு ஞாபகம் வரும் இந்திப்படப் பாடல் ஒன்றின் குலுக்கல் காட்சியை நினைத்துக் கொண்டு சிரித்துக் கொள்ளலாம்). ஒருவேளை குடும்பத்தோடு அமர்ந்து நீலப்படங்கள் மட்டும்தான் பார்ப்பார்களோ என்னவோ. நமக்கு ஏன் பொல்லாப்பு?
ஆயிரக்கணக்கான பார் பெண்களின் வாழ்வை அழித்த அரசு இந்த நடனத்தை தடை செய்வதில் வியப்பேதுமில்லை.
உடல் என்பது மனிதனின் காமத் தேடுதலை தூண்டிவிடுவதாக வைத்திருப்பதில் உங்கள் கலாச்சாரம் பெரும் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. பெருத்த மார்புகள் இந்திய ஆடவனின் மனதை களைத்தெறியும் அளவிற்கு வேறு தேசத்தில் களைப்பதில்லை. ஒரு அமைச்சரின் கண்களுக்கும் குலுங்கும் மார்புதான் தெரிகிறது என்பதுதான் உங்கள் கலாச்சாரத்தின் வெற்றி.(வேறு என்ன உனக்குத் தெரிகிறது என்கிறீர்களா?. அது சரி)
இங்கு கருப்புப் போர்வைகளால் ஆசைகளை மூடி வைக்க வேண்டியிருக்கிறது. போர்வையின் வெளிப்புறம் எதுவும் தெரிவதில்லை. ஆசையின் உஷ்ணக்காற்றும், வேட்கையின் வேட்டைக் கண்களும் வெளியே தெரியக்கூடாது. ஏனென்றால் இது ஆயிரக்கணக்கான ஆண்டின் பாரம்பரியம். போர்வைக்குள் நடக்கும் கொடூரங்கள், விகாரங்கள் எதுவும் வெளியே இருக்கும் கண்களுக்குத் தெரியாமல் இருக்க வேண்டும். தண்டல்காரன்கள் போர்வையை இழுத்து மூடிவிடும் பணியை பார்த்துக் கொள்வார்கள்.
அய்யா மகராசன்களா..கலாச்சாரம் என்று இங்கு எதுவுமேயில்லை. எல்லாம் வெற்று வார்த்தைகளும், போலித்தனமான பாவனைகளும்தான். முதலில் பொருளைப் புரிந்து கொண்டு இந்தச் சொல்லை புழங்கத் துவங்குங்கள். அதுவரை இந்தச் சொல்லுக்கு தடை விதியுங்கள்.
6 எதிர் சப்தங்கள்:
இந்த கலாச்சார காவல்காரர்களின் உள்மன வக்கிரங்கள் சில நேரங்களில் வெளிப்படும் போது மிக மிக கேவலமாக அசிங்கமாக இருக்கிறது. கோவில் சிற்பங்களில் இல்லாததா? முதலில் இந்த கலாச்சாரம் என்பதற்கு ஏதாவது அளவுகோல் இருக்கிறதா? பிடிக்கவில்லைன்னா என்றால் என்ன மயித்து பாக்குறனுவ? கண்ண மூடிட்டு போகவேண்டியதுதானே? யாரோட கலாச்சாரத்த காப்பாத்த இந்த நாடகம்?
நல்ல ஒரு சாட்டையடி, போலித்தனமான கலாச்சாரக் காவலர்களுக்கு ! பதிவுக்கு நன்றி.
எ.அ.பாலா
These protectors of the great culture know very well that lakhs of minor girls are trafficed and kept illegaly in the middle of mumbai city and lakhs of minors boys spend 50rupees from their pocket money to fuck these girls.They want to act like they dont know any thing happening like that and they cry only if they are sure that it will attract the media.The whole world is laughing at our culture.We need to correct our mind set or correct our so called leaders.
மணிகண்டன், மேலெ சொன்ன அனாஇ போல, கோவில் சிற்ப்பங்களில் உள்ளது போல உடை உடுத்தி இருகவேண்டுமோ இந்தப் பெண்கள்?....கற்ப்பனை செய்து பாருங்கள்..சிரிப்பாக வரும். உண்மையிலேயே கிழக்கு -மேற்க்கு ஃபுஷன்(கன்ஃபுஷன்)!!!!!அது என்னவோ அப்பா , "ஒழுக்கம்" என்பதில் மட்டும் , எல்லாரும் ஒத்த கருத்துள்ளவர்களாக இருக்கிறார்கள். நேபாளத்து மாவோக்கள் உட்பட!!!மாவோக்களுடய நேற்றய அறிக்கை..இந்திப்படங்களை தடை செய்யவேண்டுமாம்...ஒரு வேளை சரியோ என்னமோ...ம்
'பெருத்த மார்புகளும், சுழலும் இடுப்புகளும்' பெரும் தொந்தரவு செய்கிறதாம் // மணிகண்டன் எல்லா மேட்சையும் உட்கார்ந்து பார்க்கிறேன். மேற்கண்ட சொற்றோடரில் முதல் பாதி அப்பட்டமான பொய் :)
உங்கள் கட்டுரை கொஞ்சம் வருத்தமாகவும் அபத்தமாகவும் உள்ளது. சமுகம் என்ற அமைப்பு வரும் பொழுதே அது தனி மனித சுதந்திரத்தை ஓரளவாவது கட்டுப்படுத்துவதாகத்தான் அமையும். கலாச்சாரம் என்பது மாறிவரும் சூழலுக்கேற்ப மாறிவருவதுதான் எனினும் மாற்றங்கள், இருக்கும் சூழலை விடவும் வேகமாய் வரும்போது சிக்கல்கள் தோன்றும். கலாச்சாரம் என்பது ஒரு constant அல்ல. ஆனால் அதற்கென்று ஒரு சுழற்சி வேகம் இருக்கிறது. அந்த வேகத்தை மீறி எது நடந்தாலும் இத்தகைய எதிர்ப்புகள் வருவது எதிர்பார்க்க வேண்டிய ஒன்றே. சில நாட்களுக்கு முன்பு வரை modelling என்பது எதோ தப்புக் காரியம் போலக் கருதப்பட்டது. இப்போது நாமே நமது சகோதரிகளையும் ஓரளவு தைரியமாக அத்துறைக்கு அனுப்பக்கூடிய சூழல் உள்ளது. சுருங்க சொல்ல வேண்டுமென்றால், தவறாக நினைக்க வேண்டாம், எப்போது உங்கள் சகோதரி கிரிகெட் மைதானத்தில் இத்தகைய ஆடையுடன் ஆடுவதை நீங்கள் உங்கள் குடும்பத்துடன் கண்டு களிக்கும் நிலை வருகிறதோ, அப்போது இந்த கலாசாரக் காவலர்களும் கை தட்டுவார்கள்.
இன்னும் எத்தனையோ செய்ய வேண்டியது தேங்கி நிற்கிறது என்பதனால் இதிலும் மௌனம் காக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை.
Post a Comment