உனக்கு எழுதி முடித்த கடிதத்தின்
கோடொன்று
சலனமில்லாத் தனிமையில்
இருள் துளைத்து
மரங்களற்ற பரப்பொன்றில்
சாலையாக நீள்கிறது.
சிரிப்புகளின் அதிர்வொலி
திட்டுக்களாகி இருக்கும்
அதன் பாதையில்
யாரும் பதிக்காத கால்தடங்கள்
பறவையின் எச்சத்தைப் போல கிடக்கின்றன.
ரகசியப் பேசுக்கள் யாவும்
உறைந்து கிடக்கும்
காற்று வெளி நிசப்தத்தில்
உன் வாசல் தொட்ட கணம்
சுருங்கிய கோடு
நசுங்கிய ரோஜாச் சாற்றின்
புள்ளியாக
கடிதத்தில் படிகிறது.
வெறுமை கவிந்து கிடந்த அந்த இதழ்
உன்னை இறுதியாகத் தொட்டவைகளில்
தானும் ஒன்றென
பதறுகிறது.
கோடொன்று
சலனமில்லாத் தனிமையில்
இருள் துளைத்து
மரங்களற்ற பரப்பொன்றில்
சாலையாக நீள்கிறது.
சிரிப்புகளின் அதிர்வொலி
திட்டுக்களாகி இருக்கும்
அதன் பாதையில்
யாரும் பதிக்காத கால்தடங்கள்
பறவையின் எச்சத்தைப் போல கிடக்கின்றன.
ரகசியப் பேசுக்கள் யாவும்
உறைந்து கிடக்கும்
காற்று வெளி நிசப்தத்தில்
உன் வாசல் தொட்ட கணம்
சுருங்கிய கோடு
நசுங்கிய ரோஜாச் சாற்றின்
புள்ளியாக
கடிதத்தில் படிகிறது.
வெறுமை கவிந்து கிடந்த அந்த இதழ்
உன்னை இறுதியாகத் தொட்டவைகளில்
தானும் ஒன்றென
பதறுகிறது.