இந்தக் கட்டுரையின் துவக்கத்திலேயே ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 'நீ எழுதுவது மட்டும் நல்ல கவிதையா?' என்றோ 'நீ யார் இதை சொல்வதற்கு' என்றோ கேட்பவர்களுக்கு.
எனக்கு கவிதை எழுதுவதற்கான எந்தத் தகுதியும் இல்லை என்றே கொள்ளுங்கள். ஆனால் ஒரு விமர்சகனாக அல்லது ரசிகனாக - எந்தக் கலைப்படைப்பினைக் குறித்தான கருத்தினையும் யாரும் முன் வைக்கலாம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது என நம்புகிறேன். இதற்கு சினிமாவையே உதாரணமாக சொல்கிறேன்.(நம் குருதியில் கலந்துவிட்ட ஒன்றல்லவா?). சன் டி.வி யின் திரை விமர்சனத்தில் 'சூப்பர் சார்', 'செம பைட் சார்', 'தலைவர் நல்லா நடிசிருக்காரு' என்று சொல்லும் ரசிகன் நடிப்பிலக்கணம் தெரிந்தவனாக இருக்க வேண்டியதில்லை. இந்தக் கட்டுரையினை படிக்க ஆரம்பிக்கும் போது, என்னை அந்த விமர்சகரில் ஒருவராக கருதிக் கொள்ளுங்கள்.
நவீன கவிதை என்றெல்லாம் பேசுவது 'பெரிய மனுஷத்'தனமாகிவிடுமாதலால் கவிதை என்பதோடு நிறுத்திக் கொள்ளலாம்.
சில கவிதைகள் மிகுந்த மனச்சலிப்பினை உருவாக்கிவிடுகின்றன்.கவிதையின் பெயரால் சொற்களின் கூட்டம் எழுத்துலகினை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. சில சொற்களை எதுகை மோனையுடனோ அல்லது மடக்கி எழுதும் போதோ கவிதை வடிவம் பெற்றுவிடுவதாக ஆழ்ந்த நம்பிக்கை. பெரும்பாலோனோருக்கு.
பல வாசகர்கள்-அவர்கள் இலக்கியப் பத்திரிகையின் வாசகராக இருக்கட்டும் அல்லது வெகுஜனப் பத்திரிகையோடு நின்று விடுபவராக இருக்கட்டும். கவிதையின் பக்கம் புத்தகத்தில் வரும்போது மிக அவசரமாக, அதே சமயம் அனாயசமாகவும் தாவி விடுவதைக் கண்டிருக்கலாம். இதற்கு மேற்சொன்ன பெரும்பாலோனோரையே குற்றம் சாட்டுவேன்.
ஒரு சிறுபத்திரிக்கையாளரிடமும் பேசிப் பாருங்கள். "கவிதை நிறைய வருது. ஆனா நல்லதாத்தான் ஒண்ணும் வருவதில்லை" என்னும் வாசகம் கண்டிப்பாக தெறித்து வரும். ஒரு பதிப்பாளரிடம் பேசுங்கள். "கவிதை புஸ்தகம்தான் நிறைய வருதே. யாரு சார் வாங்குறாங்க?. மார்க்கட் இல்லை. உரைநடைனா சமாளிக்கலாம்".
கவிதை புதிதான விஷயமாக இருக்க வேண்டும் சொல்லப்படாத கோணத்தில் இருக்க வேண்டும் என்று பலரும் சொல்லி இருகிறார்கள். கவிதைகள் தாங்கி வரும் விஷயம் சலித்துப் போன விஷயங்களாகவே இருக்கும் போது, கவிதையின் மீது வாசகனுக்கு சலிப்புத் தட்டிப் போகிறது. புரியாதபடி எழுதி "நான் சாமனியனுக்காக எழுதுவதில்லை" என்று சொல்வதும் ஒரே தளம்தான்.
'உதிரும் சிறகு பறவையின் வாழ்க்கையை எழுதிச் செல்கிறது' என்னும் பிரமிளின் கவிதை மட்டும் நல்ல கவிதைக்கு உதாரணம் இல்லை. ஆனால் அதன் வித்தியாசமான கோணம் அதனைத் திரும்பிப் பார்க்க வைத்தது. ஞானக்கூத்தனின் நாய் குறித்தான கவிதையும் சொல்லலாம் "இரவில் குரைக்கும் ஒரு நாயினைப் பார்த்து அடுத்த நாய் அடுத்த நாய் எனக் குரைக்க ஆரம்பிக்கிறது. கடைசியாக குரைக்கும் நாய்க்கு காரணம் தெரியுமா" என்னும் பொருள் படும் படி எழுதியிருக்கும் கோணம் வேறுபட்டது.
பொய் மட்டும் கவிதையாகி விட முடியாது. நிலாவைப் பிடித்து தருவது, அவளின் பார்வை ஊசி போலக் குத்துவதும் புளித்துபோன செய்திகள். அவை கவிதையின் வடிவத்தில் ஏற்றப்படும் போது கவிதையின் ஆளுமை அடித்து நொறுக்கப் படுகிறது.
"அட நாம் கூட யோசித்தோமே" என வாசகனை நினைக்கச் செய்யும் போது கவிதை வெற்றி பெற்று விடுவதாக நான் கருதுகிறேன். சில சமயங்களில் சென்டிமென்ட் கவிதைகள் எளிதாக படிப்பவனை அடைந்துவிடுகிறது. அது இந்திய மனோவியல் சார்ந்த விஷயம். அடிப்படையிலேயே நமது சென்டிமென்ட் சார்ந்த வாழ்க்கை முறையின் பாதிப்பு. இதனை அடிப்படயாக வைத்து மேலும் பல கூட்டம், கவிதைகள் என்னும் பெயரில் சேர்ந்துவிடுகின்றன.காதல் கவிதைகள் கூட.
காதலிக்க எழுதப்படும் கவிதைகள், வர்ணணைக் கவிதைகள் ஆகிய அதிகமான சுமைகளைச் சுமந்து வரும் கவிதைகள்(சொற்கூட்டங்கள்) களையப்படும் போது கவிதை என்னும் பெயரால் சேரும் குப்பைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிடும்.
படிமம் குறித்தான சரியான புரிதல் இந்தப் பணியினை மேலும் எளிதாக்கும். கவிதை சற்று அறிவார்ந்த தளமாக இருப்பதால் படிமம் குறித்தான புரிதலில் பலரும் ஆர்வம் கொண்டிருப்பதில்லை.
சரி இந்தக் கட்டுரையின் நோக்கம் என்ன? தமிழில் கவிதைக்கென உருவாக்கப்பட்ட தளத்தில் பெரும் குறை இருப்பதனை சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்காக. நோக்கம் நிறைவேறவில்லை. எழுதிக் கொண்டிருக்கும்போது உணர முடிந்தது, இது ஒன்றும் ஒன்றரைப் பக்க கட்டுரையில் முடிந்துவிடக் கூடிய காரியமில்லை. அரைநூற்றாண்டுக்கும் மேலாக பலரும் முயன்று வரும் காரியம். அவ்வப்போது ஒரு கல்லினை எடுத்துப் போடலாம். இருக்கும் குழியினை மேவுவதற்காக.
நானும் ஒரு சிறு கூழாங்கல்லினை எறிய முயன்றேன்.
(மற்றபடி நான் எழுதும் கவிதைகளை இந்தக் கட்டுரையோடு படித்துவிட்டு சண்டைக்கு வந்தால் நான் பொறுப்பல்ல. வளரும் சின்னவனை விட்டு விடுங்கள்.)
எனக்கு கவிதை எழுதுவதற்கான எந்தத் தகுதியும் இல்லை என்றே கொள்ளுங்கள். ஆனால் ஒரு விமர்சகனாக அல்லது ரசிகனாக - எந்தக் கலைப்படைப்பினைக் குறித்தான கருத்தினையும் யாரும் முன் வைக்கலாம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது என நம்புகிறேன். இதற்கு சினிமாவையே உதாரணமாக சொல்கிறேன்.(நம் குருதியில் கலந்துவிட்ட ஒன்றல்லவா?). சன் டி.வி யின் திரை விமர்சனத்தில் 'சூப்பர் சார்', 'செம பைட் சார்', 'தலைவர் நல்லா நடிசிருக்காரு' என்று சொல்லும் ரசிகன் நடிப்பிலக்கணம் தெரிந்தவனாக இருக்க வேண்டியதில்லை. இந்தக் கட்டுரையினை படிக்க ஆரம்பிக்கும் போது, என்னை அந்த விமர்சகரில் ஒருவராக கருதிக் கொள்ளுங்கள்.
நவீன கவிதை என்றெல்லாம் பேசுவது 'பெரிய மனுஷத்'தனமாகிவிடுமாதலால் கவிதை என்பதோடு நிறுத்திக் கொள்ளலாம்.
சில கவிதைகள் மிகுந்த மனச்சலிப்பினை உருவாக்கிவிடுகின்றன்.கவிதையின் பெயரால் சொற்களின் கூட்டம் எழுத்துலகினை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. சில சொற்களை எதுகை மோனையுடனோ அல்லது மடக்கி எழுதும் போதோ கவிதை வடிவம் பெற்றுவிடுவதாக ஆழ்ந்த நம்பிக்கை. பெரும்பாலோனோருக்கு.
பல வாசகர்கள்-அவர்கள் இலக்கியப் பத்திரிகையின் வாசகராக இருக்கட்டும் அல்லது வெகுஜனப் பத்திரிகையோடு நின்று விடுபவராக இருக்கட்டும். கவிதையின் பக்கம் புத்தகத்தில் வரும்போது மிக அவசரமாக, அதே சமயம் அனாயசமாகவும் தாவி விடுவதைக் கண்டிருக்கலாம். இதற்கு மேற்சொன்ன பெரும்பாலோனோரையே குற்றம் சாட்டுவேன்.
ஒரு சிறுபத்திரிக்கையாளரிடமும் பேசிப் பாருங்கள். "கவிதை நிறைய வருது. ஆனா நல்லதாத்தான் ஒண்ணும் வருவதில்லை" என்னும் வாசகம் கண்டிப்பாக தெறித்து வரும். ஒரு பதிப்பாளரிடம் பேசுங்கள். "கவிதை புஸ்தகம்தான் நிறைய வருதே. யாரு சார் வாங்குறாங்க?. மார்க்கட் இல்லை. உரைநடைனா சமாளிக்கலாம்".
கவிதை புதிதான விஷயமாக இருக்க வேண்டும் சொல்லப்படாத கோணத்தில் இருக்க வேண்டும் என்று பலரும் சொல்லி இருகிறார்கள். கவிதைகள் தாங்கி வரும் விஷயம் சலித்துப் போன விஷயங்களாகவே இருக்கும் போது, கவிதையின் மீது வாசகனுக்கு சலிப்புத் தட்டிப் போகிறது. புரியாதபடி எழுதி "நான் சாமனியனுக்காக எழுதுவதில்லை" என்று சொல்வதும் ஒரே தளம்தான்.
'உதிரும் சிறகு பறவையின் வாழ்க்கையை எழுதிச் செல்கிறது' என்னும் பிரமிளின் கவிதை மட்டும் நல்ல கவிதைக்கு உதாரணம் இல்லை. ஆனால் அதன் வித்தியாசமான கோணம் அதனைத் திரும்பிப் பார்க்க வைத்தது. ஞானக்கூத்தனின் நாய் குறித்தான கவிதையும் சொல்லலாம் "இரவில் குரைக்கும் ஒரு நாயினைப் பார்த்து அடுத்த நாய் அடுத்த நாய் எனக் குரைக்க ஆரம்பிக்கிறது. கடைசியாக குரைக்கும் நாய்க்கு காரணம் தெரியுமா" என்னும் பொருள் படும் படி எழுதியிருக்கும் கோணம் வேறுபட்டது.
பொய் மட்டும் கவிதையாகி விட முடியாது. நிலாவைப் பிடித்து தருவது, அவளின் பார்வை ஊசி போலக் குத்துவதும் புளித்துபோன செய்திகள். அவை கவிதையின் வடிவத்தில் ஏற்றப்படும் போது கவிதையின் ஆளுமை அடித்து நொறுக்கப் படுகிறது.
"அட நாம் கூட யோசித்தோமே" என வாசகனை நினைக்கச் செய்யும் போது கவிதை வெற்றி பெற்று விடுவதாக நான் கருதுகிறேன். சில சமயங்களில் சென்டிமென்ட் கவிதைகள் எளிதாக படிப்பவனை அடைந்துவிடுகிறது. அது இந்திய மனோவியல் சார்ந்த விஷயம். அடிப்படையிலேயே நமது சென்டிமென்ட் சார்ந்த வாழ்க்கை முறையின் பாதிப்பு. இதனை அடிப்படயாக வைத்து மேலும் பல கூட்டம், கவிதைகள் என்னும் பெயரில் சேர்ந்துவிடுகின்றன.காதல் கவிதைகள் கூட.
காதலிக்க எழுதப்படும் கவிதைகள், வர்ணணைக் கவிதைகள் ஆகிய அதிகமான சுமைகளைச் சுமந்து வரும் கவிதைகள்(சொற்கூட்டங்கள்) களையப்படும் போது கவிதை என்னும் பெயரால் சேரும் குப்பைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிடும்.
படிமம் குறித்தான சரியான புரிதல் இந்தப் பணியினை மேலும் எளிதாக்கும். கவிதை சற்று அறிவார்ந்த தளமாக இருப்பதால் படிமம் குறித்தான புரிதலில் பலரும் ஆர்வம் கொண்டிருப்பதில்லை.
சரி இந்தக் கட்டுரையின் நோக்கம் என்ன? தமிழில் கவிதைக்கென உருவாக்கப்பட்ட தளத்தில் பெரும் குறை இருப்பதனை சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்காக. நோக்கம் நிறைவேறவில்லை. எழுதிக் கொண்டிருக்கும்போது உணர முடிந்தது, இது ஒன்றும் ஒன்றரைப் பக்க கட்டுரையில் முடிந்துவிடக் கூடிய காரியமில்லை. அரைநூற்றாண்டுக்கும் மேலாக பலரும் முயன்று வரும் காரியம். அவ்வப்போது ஒரு கல்லினை எடுத்துப் போடலாம். இருக்கும் குழியினை மேவுவதற்காக.
நானும் ஒரு சிறு கூழாங்கல்லினை எறிய முயன்றேன்.
(மற்றபடி நான் எழுதும் கவிதைகளை இந்தக் கட்டுரையோடு படித்துவிட்டு சண்டைக்கு வந்தால் நான் பொறுப்பல்ல. வளரும் சின்னவனை விட்டு விடுங்கள்.)